அமெரிக்கா அதிபர் டிரம்ப் மகள் இவான்கா பீகாரைச்சேர்ந்த மாணவி ஜோதியை பாராட்டி செய்தி?அடிபட்ட அப்பாவை 1200 கிமீ சைக்கிளில் கூட்டிட்டு சென்றதற்காக? முழு விவரம் – விண்மீன்நியூஸ்
உயிருக்காக_போராட்டம்
இவான்கா டிரம்ப், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்போட மகள் மே22ம் தேதி, ட்விட்டர்ல ஜோதி குமாரிங்கிற 15 வயசு இந்தியாவில் பீகாரை சேர்ந்த பொண்ண பத்தி செய்தி பதிவிட்டிருந்தாங்க.
அதுல, “ஜோதி குமாரி 7 நாளா, 1200 கி.மீ சைக்கிள்லையே பயணம் செஞ்சு அடிபட்ட அவங்க அப்பாவ வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததாகவும். அந்த பொண்னோட பாசத்தையும், முயற்சியையும் பாராட்டிருந்தாங்க. அத போலவே இந்திய மிதிவண்டி ஐக்கியம் (cycling federation) அந்த பொண்னோட திறமைய பாராட்டி அவங்களுக்கு திறனாய்வு நடத்தலாம்ன்னு முடிவு பன்னிருக்கு.”
நம்ம ஊடம் எல்லாம் இதை பெரிய பரபரப்பா பேசியது. கொஞ்சம் அந்த கதைய விரிவா பாப்போம்..
ஜோதி குமாரி, ஆட்டோ ஓட்டுனரான தன்னோட அப்பா கூட டெல்லில வாழ்ந்துவந்தாள். கொரோனா ஊரடங்கு அறிவிச்சதும் ஆட்டோக்கு சொந்தகாரர் அப்போ ஓட்டிய ஆட்டோவ திரும்பி ஒப்படைக்கச் சொல்லிட்டாரு.
சில நாட்களுக்கு முன்னால நடந்த விபத்துல அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கு. சொந்த மாநிலத்துக்கு திரும்ப வாகன வசதியும் இல்லாம, வருமானமும் இல்லாம, உடல் நலமும் சரி இல்லாம அப்பா இருக்க, அப்பாவ எப்படியாவது கூட்டிடு ஊருக்கு போகணும்னு ஜோதி முடிவு எடுத்தாள். ஜோதி, கையில இருந்த ரூ.800க்கு ஒரு பழைய சைக்கிள விலைக்கு வாங்கி அப்பாவ பின்னால உட்கார வைச்சு, 7 நாள் தொடர்ந்து சைக்கிள ஓட்டி பீகார்க்கு கூட்டிட்டு வந்துருக்கா.
அப்பாவ சைக்கிள்லையே வச்சு கூட்டிடு போன பொண்ணுக்கு சைக்கிள் பெடெரேஷன்ல வாய்ப்பு, சரி..
குடும்பத்தோட பெட்டி படுக்கை எல்லாம் தூக்கிட்டு, பச்சக் குழந்தைகள தோள்லையும், சூட்கேசுலையும் உட்கார வச்சுட்டுப் போன குடும்பங்களுக்கு எதுல வாய்ப்புத் தருவாங்க?
பிரசவ காலத்துல நடக்க ஆரம்பிச்சு, போகுற வழிலையே குழந்தையும் பெத்து, அதுக்கு அப்புறமும் பிறந்த குழந்தைய சுமந்துட்டே நடந்த பெண்களுக்கு எதுல வாய்ப்பு தருவாங்க?
வாய்ப்பு தருவது இருக்கட்டும். ஜோதி தன் அப்பாவுடன் என்ன காரணத்திற்காக அனல்பறக்கும் வெய்யிலில் 1200 கி.மீ மிதிவண்டி ஓட்டினாள்? எத்தனை மனிதரால் அது சாத்தியம்? உயிருக்காக போராடுகிறபோது சராசரி மனித ஆற்றலை மீறி செயல்படும் வாய்ப்புகள் ஏற்படும்.
அந்த உயிருக்கான போராட்டம் என்பது மிக பெரிய கொடுமை அல்லவா? அந்த நிலைக்கு போனதை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? அதை எப்படி சாதனையாக மட்டுமே பார்க்கிறார்கள்?