கோவில்பட்டியில் பரபரப்பு, பெண்னிடம் செயின்பறிப்பில் ஈடுபட்டவர் அதிரடி கைது?காவல்துறை உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கைது நடவடிக்கை
கோவில்பட்டியில் பெண்னிடம் செயின்பறிப்பில் ஈடுபட்டவர் கைது
காவல்துறை உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சி செந்தில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் இவரது மகள் லட்சுமி பிரபா (36). கடந்த 21ந்தேதி கோவில்பட்டி ராஜ் மஹால் பகுதியில் லட்சுமி பிரபா நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 14 கிராம் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதையடுத்து லட்சுமி பிரபா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் ராஜூவ் நகர் ஆறாவது தெருவை சேர்ந்த ரத்தினவேல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்