கல்வி
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *6 – 7 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ;1 ; கடவுள் வாழ்த்து ;* *குறள் ; 10 ;* *பிறவிப் பெருங்கடல் நீந்துவர் , நீந்தார்* *இறைவன் அடிசேரா தார்* . . *விளக்க உரை* ; முழுமுதற் கடவுளுடைய திருவடிகளைப் பற்றினவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கரையேறுவர் , அவற்றைப் பற்றாதவர்கள் , அங்ஙனம் கரையேறாது அதனுள் அழுந்துவர் , *அதாவது ஒருவர் கடவுளின்* *திருவடிகளை முழுமனதுடன்* *பக்தியுடன் அடைந்தால்* , *பிறவி எனும் பெரிய* *கடலைக் கடப்பார்* , *அப்படி பக்தி இல்லாத* *மற்றவர் அதனை கடக்க* *மாட்டார்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 6 – 7 – 2023 ; வியாழக் கிழமை ; அதிகாரம் ;1 ; கடவுள் வாழ்த்து ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *5 – 7 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ;108 ; கயமை ;* *குறள் ; 1079 ;* *உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்* *வடுக்காண வற்றாகும் கீழ்* . *விளக்க உரை* ; பிறர் நன்றாக ஆடையணிவதும் புசிப்பதுங் கண்டால் , அவர்பாற் பொறாமையினாற் கீழ்மக்கள் குற்றங் காணவல்லவர் ஆவர் , *அதாவது நல்ல* *குணமில்லாத கீழ்மக்கள்* , *பிறர் நன்றாக உடுப்பதையும்* *உண்பதையும் கண்டால்* *பொறாமையால் அவர்கள்* *மீது குற்றம் காண்பார்கள்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 5 – 7 – 2023 ; புதன் கிழமை ; அதிகாரம் ;108 ; கயமை ; குறள்…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *4 – 7 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ;107 ; இரவச்சம் ;* *குறள் ; 1064 ;* *இடம்எல்லாம் கொள்ளத் தகைத்தே இடம்இல்லாக்* *காலும் இரவொல்லாச் சால்பு* . *விளக்க உரை* ; உணவிற்கு இடமில்லாத போழ்தும் , இரப்பதற்கு உடன்படாத மன அமைதி , உலக முழுவதிலும் அடங்காத பெருமையை உடைத்து , *அதாவது உண்பதற்கு* *உணவு இல்லாத போதும்* , *மற்றவரிடம் கேட்பதற்கு* *மனமில்லாத பண்பு* *உலகமே ஈடாகாத* *பெருமையுடையது* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 4 – 7 – 2023 ; செவ்வாய்க் கிழமை ; அதிகாரம் ;107 ; இரவச்சம் ; குறள்…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *3 – 7 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ;106 ; இரவு ;* *குறள் ; 1057 ;* *இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்* *உள்ளுள் உவப்பது உடைத்து* . *விளக்க உரை* ; இரப்பவரை அவமதித்து ஏசாது கொடுப்பவரைக் கண்டால் இரப்பவருடைய மனம் மகிழ்ச்சியடைந்து . உள்ளுக்குகுள்ளே நிறைவடையதாகும் , *அதாவது உதவி கேட்பவரை* *அவமானப்படுத்தாமல்* *பொருள் கொடுப்பவரைக்* *கண்டால்* , *பெற்றுக் கொண்டவர் மனம்* *மகிழ்ந்து உள்ளத்துள்ளேயே* *மென்மேலும் மகிழ்வர்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 3 – 7 – 2023 ; திங்கள் கிழமை ; அதிகாரம் ;106 ; இரவு ; குறள்…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *2 – 7 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ;104 ; உழவு ;* *குறள் ; 1033 ;* *உழுதுண்டு வாழ்வரே வாழ்வார்மற்று எல்லாம்* *தொழுதுண்டு பின்செல் பவர்*. *விளக்க உரை* ; உழவினால் உணவுபெற்று வாழ்கின்றவர்களே சிறப்பாக வாழ்வார் ஆவர் , மற்றோரெல்லாம் பிறரை வணங்கி உணவுகொண்டு அவர் பின்னே செல்வார் ஆவர் , *அதாவது தனது உழைப்பால்* *உழவு செய்து உணவைப்* *பெற்று உண்டு* *வாழ்கின்றவரே தலைநிமிர்ந்து* *உயிர் வாழ்கின்றவராவார்* , *மற்றவர்களெல்லாம் பிறரை* *வணங்கி அவர்கள் பின்னே* *பணிந்து சென்று உணவு* *உண்டு வாழ்கின்றனர்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 2 – 7 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ; அதிகாரம் ;104 ; உழவு ; குறள்…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *1 – 7 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ;103 ; குடிசெயல்வகை ;* *குறள் ; 1023 ;* *குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்* *மடிதற்றுத் தான்முந் துறும்* . *விளக்க உரை* ; என் குடியைச் செம்மைப் படுத்துவேன் என்று முயற்சி செய்யும் ஒருவனுக்குத் தெய்வம் ஆடையை இறுக்கிக் கட்டிக் கொண்டு உதவிசெய்ய முற்பட்டு நிற்கும் . *அதாவது எனது குடும்பத்தை* *உயரச் செய்வேன் என்று* *முயற்சி செய்யும்* *ஒருவனுக்குத் தெய்வமே* *ஆடையை இறுக* *உடுத்திக் கொண்டு* *அவனுக்கு வழிகாட்டியாக* *முன்னே செல்லும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 1 – 7 – 2023 ; சனிக் கிழமை ; அதிகாரம் ;103 ; குடிசெயல்வகை ; குறள்…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *30 – 6 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ;102 ; நாணுடைமை ;* *குறள் ; 1013 ;* *ஊனைக் குறித்த உயிரெல்லாம் , நாணென்னும்* *நன்மை குறித்தது சால்பு* . *விளக்க உரை* ; உயிர்கள் எல்லாம் உடம்பை நிலைக்களமாக உடையன , சால்பு என்பது *” நாண் ,* என்னும் நற்குணத்தை நிலைக்களமாக உடையது , *அதாவது உயிர் உடம்பை* *இருப்பிடமாக* *கொண்டுள்ளது அதுபோல* , *நிறைந்த நல்ல குணம்* *என்பது ” நாண் , என்னும்* *நற்குணத்தை இருப்பிடமாகக்* *கொண்டுள்ளது* . *”நாண் , என்பது தவறான* *செயலைச் செய்யக் கூசுதல்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 30 – 6 – 2023 ; வெள்ளிக் கிழமை ; அதிகாரம் ;102 ; நாணுடைமை ; குறள்…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *29 – 6 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ;101 ; நன்றியில் செல்வம் ;* *குறள் ; 1008 ;* *நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்* *நச்சு மரம்பழுத் தற்று* . *விளக்க உரை* ; விரும்பப்படாதவனுடைய செல்வம் ஊர் நடுவே நச்சுமரம் பழுத்தாற் போலும் , *அதாவது கோடி கோடியாக* *செல்வங்கள் இருந்தும்* *எளியவர்களுக்கு உதவி* *செய்ய மனம் இல்லாதவன்* *செல்வம் ஊரின் நடுவே* *விஷம்நிறைந்த மரத்தில்* *நச்சுபழம் பழுத்தது* *போலாகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 29 – 6 – 2023 ; வியாழக் கிழமை ; அதிகாரம் ;101 ; நன்றியில் செல்வம் ;…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *28 – 6 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ;100 ; பண்புடைமை ;* *குறள் ; 992 ;* *அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்* *பண்புடைமை என்னும் வழக்கு*. *விளக்க உரை* ; யாரிடத்தும் அன்புடைமையும் உயர்ந்த குடிப்பிறப்புமாகிய இரண்டும் , பண்புடையன் என்ப்படுதற்கு வழியாகும் , *அதாவது உயர்ந்த* *குடியிற்ப் பிறந்தும்* , *அன்புடையவராக இருப்பதும்* *ஆகிய இரண்டும்*, *பண்புடையார் என்று* *சொல்லப்படுவதற்கு* *அடிப்படைத் தகுதிகளாகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 28 – 6 – 2023 ; புதன் கிழமை ; அதிகாரம் ;100 ; பண்புடைமை ; குறள்…
Read More » -
கோவில்பட்டியிலுள்ள நாடார் நடுநிலைப் பள்ளியில் தூத்துக்குடி வான் அறிவியல் கழகம் சார்பில் உலக விண்கற்கள் காணும் தினம் மற்றும் பயிற்சி✍️ முழுவிவரம்?விண்மீன்நியூஸ்?
கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் தூத்துக்குடி வான் அறிவியல் கழகம் சார்பில் உலக விண்கற்கள் காணும் தினத்தை முன்னிட்டு தொலைதூரத்தில் உள்ள பொருட்களை டெலஸ்கோப் மூலம் மாணவர்கள்…
Read More » - advertisement by google