கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கம்?கல்லூரி செயலாளரும், தொழிலதிபருமான கண்ணன் முன்னிலை?கல்லூரி முதல்வர் கந்தசாமி தலைமை உரை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கம்*
கோவில்பட்டி:
கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி செயலாளரும், தொழிலதிபருமான கண்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கந்தசாமி தலைமை உரை ஆற்றினார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி கற்பதின் முதல் படிநிலை ஒருமுகப்படுத்தப்பட்ட கவனித்தல் தான் என்பதை மாணவர்களுக்கு நகைச்சுவை கலந்து விளக்கி கூறினார்.
மேலும் இயற்பியல் பாடத்தில் தனிச் சிறப்புகளை வரிசைப்படுத்தி விரிவாக உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இயற்பியல் துறை தலைவர், பேராசிரியை சசிதா மற்றும் உதவிப் பேராசிரியர்கள் ரவி, முத்துச்செல்வி, பிரிசில்லாகாந்தி ராணி, ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி அலுவலக பணியாளர்களும், இயற்பியல் துறை மாணவ, மாணவிகளும், ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரி செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.