இந்தியாஉலக செய்திகள்கிரைம்வரலாறு

வெறும் கற்கள், குச்சிகளால் தாக்கி ,கொடூர சண்டையிட்டஇந்திய -சீன ராணுவ வீரர்கள்? ஒரு குண்டுகள் கூட பாயவில்லை?பகீர் தகவல்? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

ஒரு குண்டு கூட பாயவில்லை.. லடாக்கில் கற்கள், குச்சிகளால் மட்டும் நடந்த கொடூர சண்டை.. பகீர் காரணம்!

advertisement by google

லடாக்: இந்தியா சீனா இடையில் நேற்று லடாக் எல்லையில் நடந்த சண்டையில் துப்பாக்கிகள், குண்டுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க கற்களை வைத்து தாக்கி சண்டை நடந்துள்ளது.

advertisement by google

லடாக் எல்லையில் தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்தியா – சீனா ராணுவம் இடையே லடாக் எல்லையில் நேற்று இரவு நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேரும் ஒரு ராணுவ அதிகாரியும் வீர மரணம் அடைந்தனர்.
லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இந்த சண்டை நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகிறது.
1975ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறை.. இந்திய ராணுவம் மீது சீனா தாக்குதல்.. பதிலடிக்கு இந்தியா தயார்

advertisement by google

துப்பாக்கி ஆயுதம்
இந்த நிலையில் இந்த இரண்டு நாட்டு சண்டையில் நேற்று ஒரு குண்டு கூட பாயவில்லை. இரண்டு நாட்டு வீரர்களும் நவீன ஆயுதங்களை வைத்து இருந்தனர். ஆனாலும் இவர்கள் யாரும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளவில்லை. எந்த விதமான நவீன ஆயுதங்களையும் இந்த சண்டையில் பயன்படுத்தவில்லை. ஆனாலும் கூட இந்த சண்டையில் இந்திய தரப்பில் 3 பேரும், சீன தரப்பில் 5 பேரும் பலியாகி உள்ளனர்.

advertisement by google

கற்கள்
நேற்று நடந்த சண்டை முழுக்க முழுக்க குச்சிகள், மற்றும் கற்களால் நடந்த சண்டை ஆகும். மாறி மாறி இரண்டு தரப்பும் எல்லையில் கற்களை வீசி இருக்கிறது. சீனாதான் முதலில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறி இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்தியாதான் அத்துமீறியது என்று சீனா கூறி வருகிறது. அதேபோல் சீனாவின் ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை தொடர்பாக சில சந்தேகங்கள் எழுந்துள்ளது.

advertisement by google

அடிக்கடி தாக்குதல்
இதற்கு முன்பே இப்படி எல்லையில் வீரர்கள் கற்களை வைத்து சண்டை போடும் சம்பவங்கள் நடந்து உள்ளது. லடாக் எல்லையில் பாக்காங் திசோ அருகே பகுதியில் இந்தியா வீரர்களை இதேபோல் கற்களை வைத்த சீன ராணுவம் தாக்கியது. மேலும் மே 28ம் தேதி இதேபோல் இந்திய வீரர்கள் மற்றும் சீன வீரர்கள் இடையே எல்லையில் கற்களை வைத்து தாக்கி சண்டை நடந்தது.

advertisement by google

சிக்கிம்
இதேபோல் சிக்கிமிலும் கடந்த மே மாதம் தொடக்கத்தில் சீன ராணுவம் மற்றும் இந்திய ராணுவம் இடையில் எல்லையில் சண்டை வந்தது. அப்போது குச்சிகளை வைத்து சீன ராணுவம் இந்திய வீரர்களை தாக்கியது. பொதுவாக இந்தியா – சீனா இடையே எல்லையில் சண்டை வந்தால் துப்பாக்கி குண்டுகள் வைத்து எல்லாம் தாக்குதல் நடக்காது. குச்சி – கற்களை வைத்து மட்டுமே சண்டை நடக்கும்.

advertisement by google

ஏன் காரணம்
கடந்த இந்தியா – சீனா இடையிலான லடாக் போருக்கு பின் 1975ல் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு நாட்டு வீரர்களும் அதன்பின் எல்லையில் துப்பாக்கி மூலம் தாக்கியதே இல்லை. இதனால் எப்போது சண்டை நடந்தாலும் துப்பாக்கி இல்லாமல் மட்டுமே நடக்கும். இதனால்தான் நேற்றும் இரவு நடந்த சண்டையில் துப்பாக்கி பயன்படுத்தடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button