வாக்காளர் களை சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் பணியில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும்- தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் R.S.ரமேஷ் சுற்று அறிக்கை
கோவில்பட்டி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 26,27- ந் தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாமினை பயன்படுத்தி தாங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும். மேலும் அனைத்து நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டு புதிய இளம் வாக்காளர்களை சேர்க்க மும்முரமாக களப்பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.