கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகணேஷ் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் பெண்சில் என ரூ 200 மதிப்புள்ள மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கள்?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகணேஷ் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் பெண்சில் என ரூ 200 மதிப்புள்ள தேவையான பொருட்கள் வழங்கள்? – விண்மீன் நியூஸ்
கோவில்பட்டியில் கொரோனா நிவாரனமாக பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கிய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பாராட்டு
தற்போது உள்ள கொரோனா ஊரடங்கினால் உலகமே தவித்து வரும் நிலையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் செய்த முன் எச்சரிக்கை நடவடிக்கையினால் கொரோனா தொற்று குறைந்து உள்ளது. தமிழக அரசு பொதுமக்களுக்கு பல நிவாரணங்களை செய்து வருகிறது. மேலும் பல தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு இலவச அரிசி காய்கறிகள் மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். இந்த ஊரடங்கினால் பள்ளி மாணவ மாணவியர்கள் பெற்றோருடன் வீட்டில் தீப்பெட்டி ஒட்டி தங்களுக்கு தேவையான நோட்டு புத்தகம் மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்காக இருந்தது. இந்த கொரோனாவால் பெற்றோர்களே வேலையில்லாமல் பாதிக்கப்பட்டநிலையில் அவர்களுக்கு உதவி செய்து தாங்கள் சிறிய வருமானம் ஈட்டிவந்தது அடியோடு நின்றது. இதனை கருத்தில் கொண்டு மற்றவர்களுக்கு உதவி வந்த சமத்துவ மக்கள் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகணேஷ் இதற்கு ஒரு படி மேலே யோசித்து மாணவ மாணவிகள் தங்கள் சிறிய சம்பாத்தியத்தில் வாங்க நினைத்த நோட்டு பேனா பென்சில் கலர் பென்சில் ஆகியவற்றை வழங்க முடிவு செய்தார். இதனால் இன்று சுமார் 200க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவியருக்கு கொரோனா நிவாரனமாக இலவச நோட்டு பேனா பென்சில் கலர் ஸ்கெட்ச் ரப்பர் சுமார் 200 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர இளைஞர் அணி செயளாலர் பரணி சதீஸ் நகர தொண்டர் அணி செயளாலர் சரத் சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். நிவாரனமாக பணம் அரிசி மற்ற பொருட்களை வழங்கி மாணவ மாணவியர்களை தரம் குறைக்காமல் நோட்டு பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்களை வழங்கியது பொதுமக்களிடையே வரவேர்ப்பையும் பாராட்டையும் ஏற்ப்படுத்தியது.