கோவில்பட்டி தோட்டிலோவன்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது ? ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல்?முழுவிபரம்
கோவில்பட்டி அருகே பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது – ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல்
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீஸார் தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகேயுள்ள சோதனைச்சாவடியில் நின்று கொண்டு, வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து பைக்கில் கோவில்பட்டி நோக்கி வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டபோது, பைக்கில் ஒன்றேகால் கிலோ கஞ்சாவை பிளாஸ்டிக் பையில் வைத்திருப்பது கண்டறியப்பட்டது.தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தூத்துக்குடி மீளவிட்டான் வள்ளிநாயகிபுரம் 5ஆவது தெருவைச் சேர்ந்த சுந்தரராஜ் மகன் மாரிமுத்து(42) மற்றும் தூத்துக்குடி மடத்தூர் வேலாயுதம் மகன் மாரிமுத்து(40) என்பது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் போலீஸார் அவர்களிடமிருந்த ஒன்றேகால் கிலோ கஞ்சா மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.