கடம்பூரில் கல்குவாரி தண்ணீரில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு?முழு விவரம் – விண்மீன் நியூஸ்
கடம்பூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கடம்பூரில் செயல்படாத நிலையில் இருந்து வந்த கல்குவாரி கிடங்கில் தேங்கியுள்ள தண்ணீரில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை சனிக்கிழமை போலீஸார் மீட்டனர்.
கடம்பூர் – பசுவந்தனை சாலை ரயில்வே கேட் அருகேயுள்ள செயல்படாத நிலையில் இருந்து வந்த கல்குவாரி கிடங்கில் தேங்கியுள்ள தண்ணீரில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக கடம்பூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கடம்பூர் போலீஸார் ஓட்டப்பிடாரம் தீயணைப்புப் படை வீரர்கள் உதவியுடன் தண்ணீரில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கடம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.