25,O00 உருளைக்கிழங்கு போண்டா க்களை தயாரித்து அசத்தல்?
25,000 உருளைக்கிழங்கு போண்டாக்களை தயாரித்து அசத்தல்
மும்பை அருகே 100 சமையல்காரர்கள் ஒரே இடத்தில் கூடி 12 மணி நேரத்தில், உலக சாதனை முயற்சியாக 25 ஆயிரம் உருளைக்கிழங்கு போண்டாக்களை தயாரித்து அசத்தியுள்ளனர்.
பலரும் பலவாறாக சாதனைகளை நிகழ்த்தும் நிலையில், தானே மாவட்டத்தின் டோம்பிவல்லி(Dombivali) பகுதியை சேர்ந்த சத்யேந்திர ஜோக் என்ற சமையல் கலைஞருக்கு புதிய யோசனை தோன்றியுள்ளது.
நம்மூர் உருளைக்கிழங்கு போண்டாவை, மகாராஷ்டிராவில் “பட்டாட்டா வடா”(batata vada) எனக் கூறுகின்றனர். இதை தயாரித்து சாதனை படைக்க எண்ணி, ஆயிரத்து 500 கிலோ உருளைக்கிழங்கு, 500 கிலோ சமையல் எண்ணெய், 350 கிலோ மாவு ஆகியவற்றை பயன்படுத்தி, சனிக்கிழமை காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள், அதாவது 12 மணி நேரத்திற்குள், 100 சமையல்காரர்கள் ஒரே இடத்தில் திரண்டு, 25 ஆயிரம் உருளைக்கிழங்கு போண்டாக்களை தயாரித்து அசத்தியிருக்கின்றனர்.