கொரோனா வைரஸ் பரவலைத்தடுக்க யோசனைகளை அளித்தால் 1லட்சம் பரிசு? இந்தியபிரதமர் மோடி அறிவிப்பு?
♦கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யோசனைகளை அளித்தால் ரூ. 1 லட்சம் பரிசு: பிரதமர் மோடி அறிவிப்பு..
?கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யோசனைகளை அளித்தால் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
?சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 115 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
?கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யோசனைகளை அளித்தால் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
?இது தொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது: ஒரு ஆரோக்கியமான உலகத்திற்காக புதிய யோசனைகளை பயன்படுத்த நினைக்கிறேன்.
?நிறைய பேர் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அவர்கள் எல்லாம் தங்களது ஆலோசனைகளை பிரதமர் அலுவலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். அது பலருக்கும் உதவும். இவ்வாறு அவர் பதிவிட்டுளார்.