குழந்தைகள்தினவிழா திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில்?
குழந்தைகள் தின விழா
திருச்சி தென்னூர், சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 130-வது பிறந்ததினம் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் அருள்தாஸ் நேவிஸ், ஜெயலட்சுமி, திருச்சி லேடிஸ் சர்க்கிள் எண் . 33 தலைவி பார்கவி , யோகாசிரியர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளியில் ஜவகர்லால் நேருவின் புகைப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால்
மலர்தூவி மரியாதை செலுத்தப்பபட்டது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளித் தலைமையாசிரியர் மாணவர்களுக்கு
உங்கள் சாதனை அம்மாவிற்கு மகிழ்ச்சி, உங்கள் வெற்றி அப்பாவிற்கு மகிழ்ச்சி, உங்கள் வளர்ச்சி ஆசானுக்கு மகிழ்ச்சி, நல்லோராய் நீடு வாழ செய்யுங்கள் முயற்சி, நாளும் நாளும் நம் வாழ்வில் மலரட்டும் மகிழ்ச்சி என்று மாணவர்கள் புகைப்படத்துடன் கூடிய குழந்தைகள் தின வாழ்த்து அட்டையை வழங்கினார். மாணவர்களுக்கு ரோஜா, துளசி விதைப் பந்துகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். பள்ளி ஆசிரியர்கள் சரண்யா, உமா, உஷாராணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்து இருந்தார்கள்.