பப்ளூ என்கிற குண்டன், குமரிக்கு புதியவரவு பப்ளூ வாழைப்பழம்?
“பப்ளூ” என்கிற குண்டன்
குமரிக்கு புதிய வரவு ‘பப்ளூ’
குமரி மாவட்டத்திற்கென்றே தனிச் சிறப்பு வாய்ந்ததும், வேறு எங்குமே கிடைக்காத வாழைப்பழ ரகங்கள் பல உண்டு.
அந்த வகைகள் மட்டி, சிங்கன்,பூவன்,சிகப்பு என்ற செவ்வாழை, மோரீஸ்,பேயன் என வாழைப்பழங்கள் தித்திக்க வைக்கிறது. இதில் மட்டிப்பழத்தினை பச்சை கைக் குழந்தைகளுக்கு கூட உண்ணக் கொடுப்பார்கள் தாய்மார்கள்.
இந்த ‘பப்ளூ’ தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் (திருச்சி) விஞ்ஞானிகளின் கண்டுப்பிடிப்பாகும்.
பரிசோதனை முறையில் மாநிலம் முழுவதுமாக உள்ள ஒரு சில வாழை விசாயிகளுக்கு கொஞ்சமாகவே கன்றுகளை வழங்கியுள்ளார்கள். இந்த வகை விளைச்சலில் மிகக் குறைவான வாழைகள் குலைத்துள்ளன.
(நாட்டுப்பழத்தின் சித்தப்பா) மெந்தன் என்கிற வகையராவினையும் கற்பக’வள்ளி’ என்கிற குடும்பத்தையும் கலந்து செய்த கலவை இந்த ‘பப்ளூ’.
பார்வைக்கு மெந்தன் தண்டியிலும் சுவையில் கற்பகவள்ளியின் சுவையை ஒத்ததாக இருக்கிறது. சாதாரண நாடன் ஏத்தன் குலை 15 கிலோ எடையில் காணப்படும் இந்த பப்ளூ குலை சுமார்25 கிலோ வரை எடையில் இருக்கிறது.
இந்த பப்ளூ வாழைக்காயில் சிப்ஸ் தயாரித்த போது இன்னும் ‘எம்மி’யாக இருக்கிறது என்கிறார் குமரியின் முன்னோடி வாழை விவசாயி மீனாட்சிசுந்தரம்.
பப்ளூ என்கிற வாழைப்பழ குண்டன் நமக்கு விடக்கூடிய சவால்…
பழத்தினை முழுவதுமாக நம்மால் வாயில் வைத்துக் கடிக்க முடியுமா என்பதே !!!