இலங்கையில் தமிழர்களுடன் அதிகார பகிர்வு இல்லை?அதிபர் கோத்தபய ராஜபக்சே
இலங்கையில் தமிழர்களுடன் அதிகார பகிர்வு இல்லை – அதிபர் கோத்தபய ராஜபக்சே.
பெரும்பான்மை மக்களின் சம்மதமின்றி, இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க முடியாது, என்று அந்நாட்டு அதிபர் கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணையம் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில், ‘சர்வதேச விசாரணை அமைப்பை ஏற்படுத்தி இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் குறித்து இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, போர் குற்றம் பற்றிய 2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமை கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தை தற்போதைய வடிவில் பரிசீலிக்க முடியாது என்றார்.
சொந்த நாட்டுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்ற அவர், அதேபோல், பெரும்பான்மை மக்களின் சம்மதம் இல்லாமல், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வாய்ப்பில்லை என்றார்.