ஆளுநர் என்பதை விட மனித மாண்பாக, சேவகி என நிரூபித்த தெலுங்கானா ஆளூநர் ,mrs தமிழிசை? முழுவிவரம் – விண்மீன்நியூஸ் ,விண்மீன்தேசீய கழகம், தமிழ் தமிழர் கட்சி நன்றி பாராட்டு?
ஆளுநர் தான்….ஆனால் மனிதம் எவ்வளவு மகத்துவமானது.
மனதளவில் டாக்டர் என்பதைவிட ஒ௫ சேவகி என்பதே உண்மை!
தெலங்கானா மருத்துவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்த மேதகு ஆளுநர் Dr.தமிழிசை அவர்கள்
கொரோனா வைரஸ் காரணமாக , தெலங்கானா மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 3496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 123 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் கொரோனா பரவி வருவதை கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், இந்த மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களும் செவிலியர்களும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் ஹைதரபாத்தில் பஞ்சகுட்டா பகுதியில் உள்ள நிசாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் சுகதாரத்துறை ஊழியர்களை மனதளவில் ஊக்கப்படுத்தும் விதமாக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணியை வெகுவாக பாராட்டினார்.
தகுந்த பாதுகாப்பு உடையுடன்தான் கொரோனா பாதிக்கப்பட்ட இடத்துக்கு தமிழிசை அவர்கள் சென்றிருந்தார். ‘ஆளுநராக இருந்தாலும் ஒரு டாக்டருக்குரிய கடமையை அவர் இன்னும் மறக்கவில்லை.
மக்கள் சேவையே மகேசன் சேவை