மத்தியபிரதேசத்தில் தலீத் சிறுவர்கள் 2 பேர் கொலை : காயல் அப்பாஸ் கண்டனம் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
மத்தியபிரதேச மாநிலம், சிவ்புரி மாவட்டத்திற்கு உட்பட்ட பாவ்கேதி கிராமத்தை சேர்ந்த ரோஷனி பால்மிகி( 12 ) அவினாஷ்பால்மிகி( 10 )ஆகிய இரண்டு சிறுவர்கள் நேற்று காலையில் திறந்த வெளியில் மலம் கழித்தாக தெரிகிறது . இதை பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சகோதர்களான ரமேஷ்வர் யாதவ், ஹக்கிம் யாதவ், ஆகிய இருவரும் சேர்ந்த அந்த சிறுவர்களை அடித்து படு கொலை செய்ய பட்டதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தலீத், மற்றும் இஸ்லாமியர்கள், மீது தாக்குதகள் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது. ஈவ்வறக்கமின்றி படு கொலை செய்யும் சமூகவிரோதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அம்மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .
ரோஷனி பால்மிகி , அவினாஷ் பால்மிகி, இரண்டு சிறுவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.
எனவே : உயிரிழந்த இரண்டு தலீத் சிறுவர்கள் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். தலீத், மற்றும் இஸ்லாமியர்களின் பாதுகாப்பைஉறுதி செய்ய வேண்டும் மென அம்மாநில அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.