சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ,பல கோடி ரூபாய் மதிப்பிலான 8 உலோக சிலைகள் கண்டுபிடிப்பு: சிற்பக் கூட உரிமையாளர் கைது ?
சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 8 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் இதுதொடர்பாக சிற்பக் கூட உரிமையாளர் லட்சுமி நரசிம்மன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் முக்கிய சிலை வியாபாரியான லட்சுமி நாராயணன் என்பவரை தீவிரமாக கண்காணித்து வரும்நிலையில், மாமல்லபுரத்தில் பழங்கால சிற்ப சிலைகளை ரகசிய வியாபாரம் செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையும் படிக்க | அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள்: மாநகர போக்குவரத்துக் கழகம்
இதையடுத்து மாமல்லபுரம் விரைந்து சென்ற சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், மாமல்லபுரம் தனியார் சிற்ப கூடத்தில் பழங்கால சிலைகள் பதுக்கி
வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 8 உலோக சிலைகள் பறிமுதல் செய்த போலீசார், சிற்பக் கூட உரிமையாளர் லட்சுமி நரசிம்மன் என்பவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள லட்சுமி நரசிம்மன், சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் கூட்டாளிதான். அவரிடம் இந்த சிலைகள் எங்கிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டது என தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
ச