மேற்கு உலக நாடுகளின் அரசியல் விளையாட்டு இந்தியாவிடம் எடுபடாது: அதிபர் புதின்
ரஷிய மாணவர் தினத்தை முன்னிட்டு அதிபர் விளாடிமிர் புதின் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:உலகின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வளர்ச்சி கொண்ட நாடு இந்தியா. அதற்கு காரணம் தற்போதைய பிரதமரின் தலைமைப் பண்புகளே ஆகும். அவரது தலைமையில் தான் இந்தியா இத்தகைய வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளது.சர்வதேச அரங்கில் தங்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதால் இந்தியா மற்றும் அதன் தலைமையை ரஷியா நம்பியிருக்க முடியும். இந்தியாவை நம்பகத்தன்மை கூட்டாளியாக ரஷியா கருதுகிறது.இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்கிறது. இன்றைய உலகில் இது எளிதான விஷயம் அல்ல. 150 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இதனை செய்வதற்கு உரிமை உள்ளது.பிரதமர் தலைமையில் இந்தியாவின் உரிமை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது வெறும் அறிக்கை மட்டும் அல்ல. கூட்டுப்பணியை ஒழுங்கமைப்பதில் இருந்து முக்கியமானது.மேற்கு உலக நாடுகளின் அரசியல் விளையாட்டு இந்தியாவிடம் எடுபடாது. ஒரு நாட்டையும், அதன் தலைமையையும் நம்பி ஒத்துழைக்க முடியுமா அல்லது அதன் தேசிய நலனுக்காக அந்த நாடு சில முடிவுகளை எதிராக எடுக்குமா போன்ற அரசியல் விளையாட்டுகள் இந்தியாவிடம் இருக்காது என குறிப்பிட்டார்.