தமிழகம்இந்தியாஉலகம்(4. 10.2019)இரவுவிரிவானசெய்திகள் பரபரப்பானஉலகம்
?????விண்மீண்நியூஸ்?????
??நகைக்கடை கொள்ளையில் தப்பியோடிய சீராதோப்பு சுரேஷ் கைது
??பிடிபட்ட சுரேஷிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை
??திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் உறவினர்களிடம் தீவிர விசாரணை
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ??திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 5ம் நாள்: மலையப்பசாமி மோகினி அவதாரத்தில் வீதிஉலா
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?? தீபாவளி சீட்டு நடத்தி 6000க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்தவர் தலைமறைவு
காஞ்சிபுரம் : தீபாவளி சீட்டு நடத்தி 6000க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்தவர் தலைமறைவானார். கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி 6000 பேரிடம் ரூ. 1000 வரை பணம் வாங்கினார். 12 மாதங்கள் வரை ரூ.1000 பணம் வாங்கிய ராஜேஷ்குமார் தங்கம், வெள்ளி, பட்டாசு, மளிகை பொருட்கள் தருவதாக கூறியிருந்தார். தீபாவளி சீட்டு செப்டம்பர் மாதம் முடிந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இதுவரை பொருள் தரவில்லை. தீபாவளி சீட்டிற்கான பொருள் கேட்டு, பணம் கொடுத்து ஏமாந்தோர் ராஜேஷ்குமார் வீட்டிற்கு சென்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ??மாமல்லபுரத்திற்கு இரண்டு நாள் சுற்றுபயணமாக பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் வருவதையொட்டிய பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து தலைமைச்செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ??”வாக்காளர் சரிபார்க்கும் திட்டத்தில் தற்போது வரை 37 லட்சத்து 73 ஆயிரம் பேர் திருத்தம்”
வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்த்தல் மற்றும் திருத்தம் செய்யும் திட்டத்தில் தற்போது வரை 37 லட்சத்து 73 ஆயிரம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்த்தல், திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து , அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.
இதற்கு, முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரதா சாகு, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தற்போது வரை 4 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 9 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 346 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 3 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சாகு தெரிவித்துள்ளார்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?? சென்னை எண்ணூரில் ரூ.4 லட்சம் மதிப்புடைய குட்கா பறிமுதல் : 4 பேர் கைது
சென்னை : சென்னை எண்ணூரில் ரூ.4 லட்சம் மதிப்புடைய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அகமதாபாத்தில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் எண்ணூர் குடோனுக்கு கொண்டு வரப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?? ஆந்திராவில் வாடகை, கார் ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
ஹைதராபாத் : ஆந்திராவில் வாடகை, கார் ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். பாதயாத்திரையின் போது,ஜெகன்மோகன் ரெட்டியிடம் வாகன தகுதிச் சான்று, இன்சூரன்ஸ்,சாலை வரி அதிகமாக உள்ளதாக ஓட்டுனர்கள் தெரிவித்தனர். ஓட்டுனர்களின் கோரிக்கையை ஏற்று வாகன பராமரிப்பு மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.10,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?? அயோத்தி வழக்கு தொடர்பான வாதங்களை வரும் 17ம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி : அயோத்தி வழக்கு தொடர்பான வாதங்களை வரும் 17ம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 18-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் முன்னதாக முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?% மணிரத்னம் உள்ளிட்ட திரைத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?% டெல்டா மாவட்ட வளர்ச்சிக்காக ஓஎன்ஜிசி நிறுவனத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
?% ஓஎன்ஜிசி நிறுவனம் மக்களின் வரிப்பணத்தில் இயங்கக்கூடிய அரசு நிறுவனம்
தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?? மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பை முன்னிட்டு முப்படைகளுடன் ஆலோசனை
சென்னை : மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முப்படைகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் கடற்படை, கப்பற்படை, விமானப்படை அடங்கிய உயர்மட்டக் குழுக்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?% டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
?% அமித்ஷாவை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
?? பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்தவர்களிடம் ஆர்டிஓ ஆய்வு
கெங்கவல்லி, அக்.4: வருகிற 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கெங்கவல்லி தாலுகாவில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்தவர்களிடம்,நேற்று ஆத்தூர் ஆர்டிஓ துரை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதில் கடை வைக்க விண்ணப்பித்த 20 பேரிடம் பாதுகாப்பு அம்சங்களை விளக்கினார் தொடர்ந்து பட்டாசு கடை வைக்க பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத இடங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ??நெல்லை : பெற்ற மகனை கொலை செய்த வழக்கில் தாய் செல்விக்கு 10 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் – மகளிர் நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவு
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணியில் 2500 ஊழியர்கள் தீவிரம்
சேலம், அக். 4: சேலம் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 2500 ஊழியர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என சுகாதார துணை இயக்குனர் நிர்மல்சன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தலைமை அரசு மருத்துவமனையில் பிரத்யேக காய்ச்சல் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் டெங்கு பரவாமல் தடுக்க, சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்புகள் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து சுகாதா பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும், 40 ஊழியர்கள் வீதம் 800 பேரும், 30 பேரூராட்சிகளில் 30 ஊழியர்கள் வீதம் 1200 பேரும், 4 நகராட்சிகளில் 200 பேரும், மாநகராட்சிகளில் 300 பேரும் என மொத்தம் 2500 பேர் கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொசுவை ஒழிக்க 50 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் சுண்ணாம்பு அடித்து பயன்படுத்த வேண்டும். பயன்பாடின்றி காணப்படும் பொருட்களை அகற்ற வேண்டும். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற வேண்டும். போலி மருத்துவர்களை அணுகி மாத்திரைகள் வாங்கி சாப்பிடக் கூடாது. அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் திரவ உணவுகளை அதிகளவு சாப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??வழிப்பறி வழக்கில் கைதான கொள்ளையன் குண்டாசில் கைது
??இளம்பிள்ளை, அக்.4: இளம்பிள்ளை அருகே உள்ள தப்பகுட்டை கிராமம், முத்துக்குட்டியூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் மாரிமுத்து(39).இவர் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
??இந்நிலையில், இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவின் பேரில், மாரிமுத்துவுக்கு குண்டாசில் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
??இதற்கான ஆணை, சேலம் மத்திய சிறை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?? இடைப்பாடியில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
இடைப்பாடி, அக்.4: இடைப்பாடி ஒன்றிய அலுவலகம் முன் உடைந்த குடிநீர் குழாய், தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. இடைப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், கடந்த சில நாட்களாக ராசிபுரத்திற்கு செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி சாலையில் தேங்கியது. இது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன், தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று மாலை பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி, உடைந்த கூட்டு குடிநீர் திட்ட குழாயை நகராட்சி பணியாளர்கள் சீர் செய்தனர்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??இடங்கணசாலையில் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து
??இளம்பிள்ளை, அக்.4: இடங்கணசாலை பேரூராட்சியில் குப்பை கிடங்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயை அணைக்க முயன்ற போது பொதுமக்களுக்கும், பேரூராட்சி பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
??இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர்கஞ்சமலையூர் பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுக்கும் கிடங்கு உள்ளது.
??இந்த கிடங்கில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
??அவ்வழியே சென்றவர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
??அதன்பின் பணியாளர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர்.
??அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓன்று திரண்டு வந்து, இந்த இடத்தில் குப்பைகளை கொட்டி எரிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
??இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
??மேலும் பணியாளர்கள் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர்.
??அப்போது அப்பகுதி மக்கள் தீயை அணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
??இதனால் சுமார் 5 மணி நேரம் தீப்பிடித்து எரிந்தது. இதனை அடுத்து காவல் துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
??மகுடஞ்சாவடி போலீசார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
??அதன் பின் சங்ககிரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு
ஆத்தூர், அக்.4: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய படுக்கை வசதி இல்லாததால் வெறும் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தினகரனில் செய்தி வெளியானது.இதனை தொடர்ந்து நேற்று சேலம் மண்டல மருத்துவ இணை இயக்குனர் வளர்மதி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் குழந்தைகளை பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்கவும், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் கிருபா, சங்கர், பியூலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??பெரியார் பல்கலையில் சிறு தானிய பாரம்பரிய உணவு திருவிழா
ஓமலூர், அக்.4: பெரியார் பல்கலைக்கழகத்தில், சிறு தானியம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. சேலம் பெரியார் பல்கலைக்கழக உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் சிறுதானியம், பாரம்பரியம் உணவுகளை மீட்டெடுக்கும் உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நேற்று நடைபெற்றது. தற்போதைய வேகமான உலகில் பாஸ்புட் உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், ஆரோக்கியமற்ற, சுவையான உணவுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக சாப்பிடுகின்றனர். இதனால், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், உடல் பருமன் நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சியில், சேலம் பெரியார் பல்கலைக்கழக உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக சிறுதானியத்தில் தற்போதைய காலத்திற்கு ஏற்பஉணவுகளை தயாரித்துள்ளனர். அதில், சோளத்தில் கபாப், எள் வடை, பல்வேறு கீரைகள் காய்கறிகளில் சுவையான சூப்புகள், ராகி அடை, ராகி புட்டு, கம்பு கட்லெட், அரிசி அலாபுட்டு, தினை தோசை, சாமை சோறு, குதிரைவாலி பிரியாணி, கோதுமை மற்றும் காய்கறி கீரைகள், சிறு தானியங்களை கொண்டு புதிய புதிய உணவுகளை சமைத்து கண்காட்சி நடத்தி விற்பனையும் செய்தனர். இதில், இளைஞர்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர். உணவுகளை வாங்கி சாப்பிட்டனர். மாணவ, மாணவிகளின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டினர்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??சவுரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் நோயாளிகள் அவதி
ஜலகண்டாபுரம், அக்.4: சவுரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர்கள் பல நாட்களாக பணியில் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அருகே ஆவடத்தூர் கிராமம், சவுரியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் சவுரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் 2 மருத்துவர்களை கொண்ட இம்மருத்துவமனையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஒருவர் கூட பணியில் இருப்பதில்லை. இதனால், உடல்நலம் குன்றி சிகிச்சைக்காக மருத்துமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவர்கள் இல்லாததால் 5 கி.மீ தொலைவில் உள்ள ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். மேலும், காலவிரையம் ஏற்படுவதுடன் சிகிச்சை பெற முடியாமல் பொதுமக்கள்கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதிமக்கள்கூறுகையில்: சவுரியூரில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும்பாலான நாட்களில் மருத்துவர்கள் பணிக்கு வருவதில்லை. இதனால் காய்ச்சல் என வரும் நோயாளிகளுக்கு அங்குள்ள பணியாளர்கள் மருந்து மாத்திரைகளை மட்டுமே கொடுத்து அனுப்புகின்றனர். இதனால் உரிய நோய்க்கு உரிய மருந்துவம் பெற முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் மருத்துவர்கள்பணியில் இல்லாததால் குழந்தைகளை தூக்கிக்கொண்டு தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். எனவேசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாள்தோறும் மருத்துவர்கள் பணியில் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??தேசிய தடகள போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற வீரர், வீராங்கனைக்கு பரிசு
சேலம், அக்.4: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 17ம் தேதி தேசிய அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இப்போட்டியில், சேலம் மாவட்டத்தில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், போல்வால்ட் பிரிவில் சேலம் அழகாபுரம் காட்டுவளவை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி பவித்ரா கலந்துகொண்டு, 3.70 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.இதேபோல், டெக்கத்லான் போட்டியில் தனியார் கல்லூரி மாணவன் நவீன்குமார் பங்கேற்று, 6,304 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர்களையும் பயிற்சியாளர் இளம்பருதியையும் சேலம் மாவட்ட தடகள சங்கம் பாராட்டியது.இந்நிலையில், வீராங்கனை பவித்ரா, வீரர் நவீன்குமார் ஆகிய இருவரும் நேற்று, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் டாக்டர் வீரபாண்டி பிரபுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இருவரையும் பாராட்டிய அவர், இருவருக்கும் உதவித்தொகை வழங்கினார். அப்போது, சேலம் மாவட்ட தடகள சங்க செயலாளர் முத்துக்குமார், உலகநாதன், வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??ஓமலூர் வட்டாரத்தில் காந்தி பிறந்த நாளில் மது விற்ற
22 பேர் கைதுஓமலூர், அக்.4: ஓமலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, தொளசம்பட்டி பகுதிகளில், காந்தி ஜெயந்தி நாளில் மது விற்பனை செய்யப்படுவதாக ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரனுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் மதுபானங்களை விற்பனை செய்த அடைக்கனூர் முத்துமாணிக்கம், மாட்டுக்காரனூர் பழனிசாமி, கட்டிநாயக்கன்பட்டி பழனிசாமி, கோவிலூர் ராமன், மாதையன், மாசிலாமணி, செங்குட்டுவன், வையாபுரி, சந்தோஷ்குமார், சம்பூரணம், கோவிந்தன், சுரேந்திரன், ராஜேந்திரன், ராஜா, தங்கராஜ், சுமன்சிங், மணி, மாராயி, செந்தில், மணி, ராபின், சரோஜா என 3 பெண்கள்
உட்பட 22 பேரை கைது செய்தனர்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மை பணி
அயோத்தியாபட்டணம், அக்.4: அயோத்தியாபட்டணம் அருகே மேட்டுப்பட்டியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அயோத்தியாபட்டணம், வலசையூர், மின்னக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவவர்கள் படித்து வருகின்றனர். சுமார் தலைமை ஆசிரியர் அற்றும் 10க்கும் மேற்பட்ட ஆசிரிய,ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் வகையில், இப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நேற்று பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் பள்ளி முழுவதும் உள்ள முட்புதர்களை அகற்றியும், குண்டும், குழியுமான இடத்தை சீர்படுத்தி மரக்கன்று நடும் பணியையும் மேற்கொண்டனர். இப்பணியில் நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??அரசு பெண்கள் பள்ளியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை செயல் விளக்கம்
கெங்கவல்லி, அக்.4: கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வர இருக்கும் வடகிழக்கு பருவமழை குறித்து விழிப்புணர்வு செயல்விளக்கம் முகாம் நடைபெற்றன. முகாமில் தாசில்தார் சிவக்கொழுந்து, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மகேஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். கெங்கவல்லி தீயணைப்புத்துறை நிலை அலுவலர் பெரியசாமி தலைமையில் வீரர்கள் வடகிழக்கு பருவமழையின் போது, எவ்வாறு நம்மை காப்பாற்றிக்கொள்வது. இடி, மின்னல் தாக்கினால் மரத்துக்கு அடியில் நிற்க கூடாது . அதேபோல் கம்பங்களில் ஆடு மாடு உள்ளிட் கால்நடைகளை மரத்தின் அடியில் கட்டி வைக்கக் கூடாது. எனவும், வருகிற 27ம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி மாணவிகள் குடிசை வீடு இல்லாத இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.விழாவில் தீயணைப்பு வீரர்கள் செல்லப்பாண்டியன், வேல், சுப்பிரமணி மற்றும் மாணவிகள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??கெங்கவல்லியில் வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்
கெங்கவல்லி, .4: கெங்கவல்லியில் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், திருவேகம்பத்து கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இறந்த ராதாகிருஷ்ணன் மனைவி ராஜேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், அவரது குழந்தைகள் இருவருக்கும் அரசு படிப்பு செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிராம நிர்வாக உதவியாளர் சங்கம் கோவிந்தம்மாள் தலைமையில், தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்திடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??மண் அரிப்பால் சிதிலமடைந்த பாலமலை சாலை
மேட்டூர், அக்.4: மண் அரிப்பால் சிதிலமடைந்த பாலமலை சாலையை சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது பாலமலை ஊராட்சி.செங்குத்தான மலை உச்சியில் 33 குக்கிராமங்களை கொண்டுள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், 7 கிமீ தொலைவிற்கு மண் சாலை அமைக்கப்பட்டது. இந்த மண் சாலையை தார் சாலையாக மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில்,கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு பாலலை சாலை குண்டும், குழியுமாக மாறி நீரோடையாக காட்சி தருகிறது. இதில் டூவீலர்கள், கார் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால் பாலமலை மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக உணவு பொருட்கள் வாங்கவும். மருத்துவ வசதிக்காக கொளத்தூர், கண்ணாமூச்சி பகுதிக்கு வரமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதே போல், உயர் கல்வி படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் காலை மற்றும் மாலையில் உரிய நேரத்திற்கு மலையடிவாரத்தில் வந்து, பஸ்களில் ஏறி செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக பாலமலை மண் சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??புனித வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி விழா
இடைப்பாடி, அக்.1: இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் புனித வேளாங்கண்ணி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் ஆலயத்தின் வெள்ளிவிழா திருப்பலி நடந்தது. இரவு தேர்பவனி நடந்தது. வேளாங்கண்ணி மாதாவின் சிலையை பெண்கள் தூக்கிக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு பச்சாம்பாளையம் இறையரசு தியான மையம் இயக்குனர் விஜய் அமல்ராஜ் தலைமை வகித்தார். குருக்கள் ஜோசப் லாசர், அருள்ராஜ், பெரிய நாயகம், மதலை முத்து மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ??கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.
??ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ??சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதில் 5 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் சரக்கு விமானம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஆன்டொகொவ் 12 என்ற சரக்கு விமானம் ஸ்பெயினில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு விமானப் பணிக்குழுவினரோடு உக்ரைனின் ல்விவ் விமான நிலையம் நோக்கி புறப்பட்டது.
இன்று அந்நாட்டு நேரப்படி காலை 7.10 மணியளவில் ல்விவ் விமான நிலையத்தை அடைய சுமார் 14 கிலோ மீட்டர் இருக்கும் போது விமானம் ரேடாரில் இருந்து மாயமானது.
பின் 7 மணி 29 நிமிடங்களில் விமானப் பணிக்குழு, ல்விவ் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து அவசர தரையிறக்கத்துக்கு அனுமதி கோரியது.
அப்போது விமான நிலையத்தை அடைய வெறும் ஒன்றரை கிலோ மீட்டர் தூரமே இருந்தது.
இந்நிலையில், விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரக்கு விமானத்தில் பயணித்த பணிக் குழுவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் வ்லாடிஸ்லவ் கிரிக்லி தெரிவித்துள்ளார்.
4 எஞ்சின்கள் கொண்ட சோவியத் வடிவமைப்பான அந்த சரக்கு விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டார்.
?winmeennews.com?ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ??சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருது தொடர்ந்து 62வது நாளாக ஒகேனக்கல் காவிரியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை.
?winmeennews.com?ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: ??டெல்டா மாவட்ட வளர்ச்சிக்காக ஓஎன்ஜிசி நிறுவனத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
ஓஎன்ஜிசி நிறுவனம் மக்களின் வரிப்பணத்தில் இயங்கக்கூடிய அரசு நிறுவனம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை
?winmeennews.com?ஊடகதளம்
[10/4, 9:02 PM] விண்மீண்நியூஸ்2: JUSTIN
??மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக- சிவசேனா இடையே தொகுதிப் பங்கீடு இறுதியானது
??288 தொகுதிகளில் பாஜக – 148, சிவசேனா – 126, கூட்டணி கட்சிகள் – 14 தொகுதிகளில் போட்டி
?winmeennews.com?ஊடகதளம்