இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திவிளையாட்டு

பரபரப்பான தமிழகம் இந்தியா உலகம் இன்றைய சம்பவங்கள்

advertisement by google

????விண்மீண்நியூஸ்???? ??201 தபால் வாக்குகளிலும் ஒரே தலைமை ஆசிரியரே attestation செய்துள்ளனர்; தபால் வாக்கு தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பாகும்

advertisement by google

முகாந்திரம் இருப்பதாலேயே எனது வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றது

advertisement by google

– எம்.எல்.ஏ இன்பதுரை
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??2016 ராதாபுரம் தேர்தலில் பல்வேறு தலைமை ஆசிரியர்கள் தான் 201 தபால் வாக்குகளில் சான்றொப்பம் செய்துள்ளனர்

advertisement by google

அதிகாரிகளின் துணையுடன் எனது வெற்றி தட்டி பறிக்கப்பட்டுள்ளது; நீதிமன்றம் மூலம் நல்ல தீர்ப்பு வரும்

advertisement by google

– திமுக வேட்பாளர் அப்பாவு
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ?? #JUSTIN

advertisement by google

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

advertisement by google

அஸ்வின் 8 விக்கெட்டுகள் மற்றும் ஜடேஜா 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??வந்தார்கள்; எடுத்தார்கள்; சென்றார்கள் – ஒரு நிமிடத்துக்குள் நடந்த வங்கிக் கொள்ளை

advertisement by google

அதிவேகமாக வங்கிக்குள் நுழைந்து ஒரு நிமிடத்துக்குள் ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற 6 கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்

பீகார் மாநிலம், முஸாபர்பூர் என்ற இடத்தில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று தலையில் ஹெல்மெட் மாட்டியபடி வங்கிக்குள் நுழைந்த 6 பேர் அதிவேகமாக செயல்பட்டு கவுன்ட்டரில் இருந்து ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்துச் மின்னல் வேகத்தில் தப்பித்துச் சென்றனர். உள்ளே நுழைந்ததும் இருவர் அங்கிருந்த வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் கட்டுப்படுத்தியுள்ளனர். இருவர் காவலாளியின் துப்பாக்கியைப் பிடிங்கி அவரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்

மற்றவர்கள் வங்கி பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளைச்சம்பவம் வங்கியில் பொருத்தப்பட்ட கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. ஆனால் கொள்ளையர்கள் ஹெல்மெட் மாட்டி இருந்ததால் அடையாளம் காணுவதில் சிரமம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வங்கியில் இருந்து 8 லட்சத்து 5ஆயிரத்து 115 ரூபாய் கொள்ளை போனதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்

கொள்ளை குறித்து தகவல் தெரிவித்த காவல் அதிகாரி, 6 கொள்ளையர்களும் ஒரு நிமிடத்துக்குள் கொள்ளையடித்துவிட்டு வெளியேறியுள்ளனர்.அதில் இருவர் சிறுவர்கள் போல உடல்வாகு இருந்துள்ளதாக தெரிகிறது. தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளோம். கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளார்
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??கேரள – தமிழக நதிநீர் பிரச்சனையில் தீர்வு கண்ட முதல்வர் பழனிசாமிக்கு அமமுக புகழேந்தி பாராட்டு; உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கும் பாராட்டு
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ?? #RAIN

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

நாமக்கல் : திருச்செங்கோட்டில் தீவிர டெங்கு கண்காணிப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

#Namakkal

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் – அமைச்சர் செங்கோட்டையைன் உறுதி

#Sengottaiyan | #Teachers

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

உலக அளவில் சுற்றுலாத்துறையில் இந்தியா 34வது இடத்தில் உள்ளது: மத்திய சுற்றுலாத்துறை

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

வரும் 11 ஆம் தேதி விமானங்கள் பறக்க தடை

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதி சென்னையில் விமானங்கள் பறக்க தடை.

#Chennai

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

வருகிற தீபாவளிப் பண்டிகையை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமைப் பட்டாசுகளுடன் கொண்டாடுமாறு பொது மக்களை மத்திய சுகாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

2020-21-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் வரும் 14-ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளன.

திருத்திய மதீப்பீடுகள் பற்றி நிதி ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்க நிதியமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோகமா? – தமிழச்சி தங்கபாண்டியன்(திமுக)
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??நீட் தேர்வு ஆள்மாற்றம் குறித்து சிபிஐ விசாரணை தேவை

-திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேட்டி

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாவர்க்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??எம்.எல்.ஏ பதவியை தினகரன் ராஜினாமா செய்ய புகழேந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

கோவை மண்டல அமமுக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் டிடிவி தினகரனை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??இஸ்ரோ தலைவர் சிவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பயணிகள்

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??மதுரையில் வடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை பெரியார் பேருந்துநிலையம் அடுத்துள்ள கென்னட் மருத்துவமனை அருகே ரயில்வே மேம்பாலத்தின் அடியில், வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி, மர்மக் கும்பல் ஒன்று சரமாரி குத்திக் கொன்றது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து உடலை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??அய்யாதுரை ஸ்டாலின் அய்யோதுரை என்ற நிலைக்கு ஆளாவார்: இன்பதுரை எம்.எல்.ஏ பேட்டி
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??வேலூர், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி தேர்தலில் போட்டியிடாதது கட்சிக்கு பின்னடைவு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அமமுகவின் சகாப்தம் முடிந்துவிடும்
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??”திமுகவின் வலிமை குறையும்போது சாதி, மதவெறி பிடித்தவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகும்”

“திமுகவை பலமிழக்க செய்வதுதான் அனைவரின் நோக்கமாக உள்ளது!”

கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்றுவந்தவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 6) சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதுள்ள தேசத்துரோக வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்

உண்மையான கருத்துகளை சுதந்திரமாக பகிர்கின்ற உரிமையை அனைவருக்கும் தரவேண்டும்

– தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட்
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??“டிடிவியை தலைவராக ஏற்றுக்கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்; சின்னத்தை மீட்டெடுப்பதாக சூளுரைத்த டிடிவி தினகரனால் எந்த வெற்றியும் பெற முடியவில்லை”- புகழேந்தி, அமமுக
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??“தினகரன் பசுந்தோல் போர்த்திய நரி; உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாவிட்டால் அமமுக வின் சகாப்தம் முடிந்துவிடும்” -புகழேந்தி, அமமுக
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??அதிமுக கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற சிப்பாய்களாக செயல்படுவோம் – புகழேந்தி,அமமுக
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??வைகை மற்றும் நொய்யல் நதிகளை சீரமைக்க ரூ.9 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசூரை சேர்ந்த டாக்டர் சீனிவாசன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

20 சவரன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு இழப்பு

டெல்லி காங்கிரஸின் மூத்த தலைவரும், சாந்தினி சவுக் தொகுதியிலிருந்து 4 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பர்லாத் சிங் சாவ்னே, முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??ஆயுதபூஜையையொட்டி தொடர்விடுமுறை: பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதல்
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??4 முறை எம்.பியும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருமான ராமாகந்த் யாதவ், அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்

2004ல் சமாஜ்வாதியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ்-ல் இணைந்து, 2008ல் பாஜகவில் இணைந்து பின்னர் அங்கிருந்தும் விலகி இந்த ஆண்டின் தொடக்கத்தில் காங்கிரஸில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ??அரசு மருத்துவமனைகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்த போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளது – விஜயபாஸ்கர் சுகாதரதுறை அமைச்சர்
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு பகுதியில் செயல்படும் ஸ்ரீ சரஸ்வதி மந்தீர் பள்ளியில் இன்று சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையே தென்மண்டல அளவிலான நீச்சல் போட்டிகள் துவங்கியுள்ளன.

இன்று துவங்கி நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, அந்தமான் உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 1200 மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், 11,14,17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் நீச்சல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், இன்று துவங்கிய இந்த போட்டியினை அர்ஜூன விருதுபெற்ற வில்சன் செரியன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
தனித்தனி சுற்றுளாக நடத்தப்படும் போட்டியின் மூலம் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைளுக்கு வரும் ஒன்பதாம் தேதி பரிசு கேடயங்களும், கோப்பைகளும் வழங்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில், எஸ்.எஸ்.வி.எம் பள்ளி நிர்வாக அறங்காவலர்கள் மனிமேகலை மோகன்தாஸ், முதல்வர் சுகுனா, அர்ஜூன விருதுபெற்ற ஷைனி வில்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
[10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை ராஜ வீதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி புது செளடம்மன்‌ கோயில்‌ வருடாந்திர பராக்கத்தி ஊர்வலமானது நாளை மறுநாள், அக்டோபர் 8 ஆம் தேதி நடை பெற உள்ளதால், போக்குவரத்து காவல் துறையினர் முக்கிய வீதிகளில் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளனர்.
அக்டோபர் 8 ஆம் தேதி, காலை 05:30 மணிக்கு ஆர்‌.எஸ்‌.புரம்‌ இராமச்சந்திரா ரோரு சர் சண்முகம் ரோடு சந்திப்பில்‌ துவங்கி மேட்டுப்பாளையம்‌ ரோடு பூமார்க்கெட்‌ வழியாக சுக்ரவார்பேட்டை சந்திப்பில்‌ இடது புறம்‌ திரும்பி, மில்‌ ரோடு வழியாக சென்று வலது புறம்‌ திரும்பி ஒப்பணக்கார வீதியில்‌ சென்று 09.00 மணிக்கு ராஜ வீதியில்‌ உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன்‌ கோவிலை அடைய உள்ளது.
அதே போல ஆர்‌.ஜி.வீதி ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி புது செளடம்மன்‌ கோயில்‌ வருடாந்திர பராக்கத்தி
ஊர்வலமானது அதே 08.10.2019 ம்‌ தேதி காலை 06.30 மணிக்கு சாய்பாபா காலனி, ராஜா அண்ணாமலை ரோடு விநாயகர்‌ கோவிலில்‌ துவங்கி அழகேசன்‌ ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக வந்து 7037 ரோட்டில்‌ இடது பக்கம்‌ திரும்பி 340 சாலை வழியாக சென்று தேவாங்கபேட்டை 3 வது வீதி வழியாக வலது பக்கம்‌ திரும்பி மேட்டுப்பாளையம்‌ சாலையை அடைந்து 10.00 மணிக்கு ஆர்‌.ஜி.வீதியில்‌ உள்ள புதுசெளடம்மன்‌ கோயிலை வந்து அடைய உள்ளது.

இதன்‌ காரணமாக கீழ்கண்டவாறு வழித்தடங்களில்‌ போக்குவரத்து மாற்றம்‌ செய்யப்பட உள்ளது.
முதலாவது ராஜ வீதி ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன்‌ கோயில்‌ பராக்கத்தி ஊர்வலத்தின்போது,

  1. முதலாவது ஊர்வலம்‌ காலை 05.30 மணிக்கு இராமசந்திரா சர் சணமுகம்‌ ரோடு சந்திப்பிலிருந்து புறப்படும் போது சுக்கரவார்பேட்டையிலிருந்து பூமார்க்கெட்‌ நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும்‌ காந்திபார்க் வழியாக ஆர் எஸ் புறம், கௌலி பிரவுன் ரோடு வழியாக மேட்டுப்பாளையம்‌ ரோடு வழியாக செல்லவேண்டிய இடங்ககுக்கு செல்லலாம்‌.
  2. மேட்டுப்பாளையம்‌ ரோடு வழியாக இராமசந்திரா ரோட்டை அடையும்‌ போது சண்முகா தியோட்டர்‌ ரோடு வழியாக புரூக் பாண்ட் ரோடு வழியாக செல்லவேண்டிய இடங்ககுக்கு செல்லலாம்‌.
  3. ஊர்வலம்‌ சுக்கரவார்பேட்டையை அடையும்‌ போது பழைய மேம்பாலத்திலிருந்து சுக்கரவார்பேட்டை நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்கஞம்‌ மரக்கடை சந்திப்பிலிருந்து இடது புறம்‌ திரும்பி டவுன்ஹால்‌, வைசியாள்‌ வீதி, சலிவன்‌ வீதி, வழியாக காந்திபார்க்‌ சென்று செல்லவேண்டிய இடங்ககுக்கு செல்லலாம்‌.
  4. பேருர்‌ ரோடு செல்வபுரத்திலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக வரக்கூடிய அனைத்து
    வாகனங்களும்‌ சிவாலயா சந்திப்பு மற்றும்‌ செல்வபுரம்‌ ஹைஸ்கூல் ரோடு வழியாக வலதுபுறம்‌
    திரும்பி உக்கடம்‌ பைபாஸ்‌ ரோடு வழியாக உக்கடம்‌ வந்து கனரக வாகனங்கள்‌ சங்கம்‌
    பைபாஸ்‌ ரோரு வழியாக கிளாசிக்‌ டவர்‌ திருச்சி ரோட்டை அடைந்தும்‌ செல்லவேண்டிய
    இடங்களுக்கு செல்லலாம்‌.
  5. இலகுரக வாகனங்கள்‌ சுங்கம்‌ பைபாஸ்‌ ரோடு Y ரோடு சந்திப்பிலிருந்து வின்சென்ட்‌ ரோடு வழியாக பெரியகடை வீதியை அடைந்து ராயல்‌ தியேட்டர்‌ வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்‌.
  6. உக்கடத்திலிருந்து ஒப்பணக்கார வீதி நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும்‌ சுங்கம்‌ பைபாஸ்‌ கிளாசிக்‌ டவர்‌ வந்து இரயில் நிலையம் வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்‌.
    இரண்டாவது ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி புதுசெளடம்மன்‌ கோயில்‌ ஊர்வலத்தின்‌ போது,
  7. இரண்டாவது ஊர்வலம்‌ மேட்டுப்பாளையம் ரோடு அழகேசன்‌ ரோட்டை அடையும்‌ போது என் எஸ் ஆர் ரோடு மற்றும்‌ மேட்டுப்பாளையம்‌ ரோட்டில்‌ இருந்து வடகோவை நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும்‌ ஏ ஆர் சி சந்திப்பிலிருந்து சிவானந்தகாலனி சென்று செல்லவேண்டிய இடங்களுக்கு
    செல்லலாம்‌.

2, இரண்டாவது ஊர்வலம்‌ மேட்டுப்பாளையம்‌‌ ரோடு அழகேசன்‌ ரோட்டை அடையும்‌ போது பூமார்கெட்டிலிருந்து மேட்டுப்பாளையம்‌ நோக்கி செல்லகூடிய அனைத்து வாகனங்களும்‌ அவினாசிலிங்கம்‌ கல்லூரி சாலையில்‌ இடதுபுறம்‌ திரும்பி பாரதிபார்க்‌ ரோடு 4, என் எஸ் ஆர் ரோடு
வழியாக மேட்டுப்பாளையம் ரோடு வழியாக செல்லலாம்‌.

  1. இரண்டாவது ஊர்வலம்‌ ஆர்‌.ஜி.வீதியை அடையும்‌ போது சுக்கரவார்பேட்டையிலிருந்து பூமார்க்கெட்‌ நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும்‌ சுக்கரவார்பேட்டை சந்திப்பிலிருந்து காந்திபார்க்‌ D.B ரோடு கெளலிபிரவுன்‌ ரோடு வழியாக மேட்டுப்பாளையம்‌ ரோடு சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்‌.
  2. ஊர்வலம்‌ VCV ரோடில்‌ வரும்‌ போது புரூக்பாண்டு சாலையிலிருந்து தேவங்கபேட்டை ரோடு வழியாக வரும்‌ அனைத்து வாகனங்கஞம்‌ வலதுபுறம்‌ திரும்பாமல்‌ நேராக புரூக்பாண்டு சாலையில்‌ சென்று பழைய மேம்பாலம்‌ வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்‌.
  3. ஊர்வலம்‌ வரும்‌ சாலைகளான மேட்டுப்பாளையம் ரோடு, ராமசந்திரா ரோடு, ஆர்‌.ஜி.வீதி, ராஜா அண்ணாமலை ரோடு, VCV ரோடு, VVC ரோடு, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி ஆகிய சாலைகளில்‌ உள்ள அனைத்து கடை உரிமையாளர்கள்‌ மற்றும்‌ வாடிக்கையாளர்கள்‌ தங்கள்‌ வாகனங்களை ஊர்வலம்‌ வரும்‌ சாலையில்‌ நிறுத்தாமல்‌ மாற்று இடத்தில்‌ நிறுத்த வேண்டும்‌ என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
    [10/6, 4:51 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் கோவை உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலா 20 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவினாசியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை உள்பட 13 பேர் டெங்கு பாதிப்புக்கு சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறும்போது:-
டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு கோவையை சேர்ந்த 5 பேர், திருப்பூரை சேர்ந்த 3 பேர், நீலகிரியை சேர்ந்த 2 பேர் உள்பட 13 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவினாசியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை தீவிர கண்காணிப்பில் உள்ளார். அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
எனவே, பொது மக்கள் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்,’ என தெரிவித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.
இதையடுத்து சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுத்தது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில், தொடர் பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

advertisement by google

Related Articles

Back to top button