சுங்குவார்சத்திரம் அருகே முதியவர் அடித்துக்கொலை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
சுங்குவார்சத்திரம் அருகே முதியவர் அடித்துக்கொலை
சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்(55). எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். ஜெயராமன் கடந்த சில தினங்களுக்கு முன்பு எச்சூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்குவதற்கான ஷெட் அமைக்க பூமிபூஜை போட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஜெயராமன் பூமிபூஜை போட்ட அவரது இடத்தின் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்,
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து ஜெயரமானின் முதல் மனைவியின் மகன் விக்னேஷ் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.