தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 74வது சுதந்திர தினவிழா – ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்டங்கள் வழங்கல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 74வது சுதந்திர தினவிழா – ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்டங்கள் வழங்கினார்.
✍நாடு முழுவதும் 74வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தருவை விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
✍இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. தியாகிகளின் வாரிசுகளை கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதனைத்தொடர்ந்து, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி ஏடிஎஸ்பி செல்வன், திருச்செந்தூர் டிஎஸ்பி பாரத், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரஞ்சித்குமார், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னபூரணி, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விமலா, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் உட்பட 26பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
✍அதைத்தொடர்ந்து, மகளிர் திட்டம் மூலம் 152 மகளிருக்கு அம்மா ஸ்கூட்டர், மற்றும் வேளாண் துறை, கூட்டுறவுத் துறை உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் 222 பயணாளிகளுக்கு ரூ.2கோடியே 39 லட்சத்து 81ஆயிரத்து 248 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இவ்விழாவில், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்னுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், சார் ஆட்சியர் பயிற்சி பிரித்வி ராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, கலால் உதவி ஆணையர் சுகுமார், பஞ்சாயத்து உதவி இயக்குநர் உமா சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் இசக்கியப்பன், தாசில்தார்கள் செல்வகுமார், ஜான்சன், குற்றாலிங்கம், ஈஸ்வரநாதன், கூடுதல கண்காணிப்பாளர்கள் செல்வன், கோபி, டிஎஸ்பிகள் கணேஷ், இளங்கோவன், நாகராஜன், மத்திய வருவாய் புலணாய்வுத்துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன், மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், காவல்துறை மக்கள் தொடர்பு அலுவலர் சத்யநாராணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.