மின் கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் திமுகவினர் கருப்பு கொடி எந்தி கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில்ஆர்ப்பாட்டம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
மின் கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் திமுகவினர் கருப்பு கொடி எந்தி ஆர்ப்பாட்டம்
✍தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் கருப்பு கொடி எந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
✍தமிழக அரசு மின்கட்டணத்தை அதிகமாக வசுலிக்கபடுவைக் கண்டித்து திமுகவினர் தங்கள் வீட்டு முன்பு கருப்புச்சட்டை அணிந்து கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து, தூத்துக்குடியில் திமுக அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
✍இக்கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் என்பி. ஜெகன் முன்னிலை வைத்தார். மேலும் ஆர்பாட்டத்தில், மாநகர செயலாளர் எஸ்ஆர். ஆனந்த சேகரன், துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார் ரூபன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் பாலகுருசாமி, தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பகுதி செயலாளர் பிரபாகரன், திமுக நிர்வாகிகள் தங்கமணி, நடராஜன், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.