இந்தியா

குடிபோதையில், கிரிக்கெட் மட்டையால் அடிக்க வந்து, பாத்திரத்தைத் தூக்கி மனைவி தலையில் எறிந்து’ – சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி✍️முழுவதும்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

தற்போது தன் மனைவியைத் தாக்கி சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். வினோத் காம்ப்ளி மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். அவர் பிற்பகல் 1 மணிக்கு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்.

advertisement by google

வீட்டிற்குள் நுழையும் போதே தன் மனைவியைக் கண்டபடி திட்டிக்கொண்டே வந்தார். வினோத் காம்ப்ளியை அவரின் 12 வயது மகன் சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் திட்டிக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்த வினோத் காம்ப்ளி அங்கிருந்த ஒரு பாத்திரத்தை எடுத்து தன் மனைவியின் தலைமீது வீசி காயப்படுத்தியிருக்கிறார். இது குறித்து வினோத் காம்ப்ளி மனைவி ஆண்டிரா கூறுகையில், “காரணமே இல்லாமல் என்னையும், எனது மகனையும் திட்டினார்.

advertisement by google

அதோடு சமையல் பாத்திரத்தால் என்னைத் தாக்கினார். மேலும் பேட்டை எடுத்து அடிக்க வந்தார். ஆனால் அதற்குள் வெளியில் ஓடிவந்துவிட்டேன். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு போலீஸில் புகார் செய்தேன்” என்று தெரிவித்தார். ஆனால் இப்பிரச்னை பேசித் தீர்க்கப்பட்டுவிட்டதாகப் பின்னர் தெரிவித்தார்.

advertisement by google

சமீபத்தில் வினோத் காம்ப்ளி அளித்திருந்த பேட்டியில் தனக்கு எந்தவித வேலையும் இல்லாமல் கஷ்டப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்திய கிரிக்கெட் வாரியம் தனக்கு எதாவது வேலை கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். வினோத் காம்ப்ளியின் குடிப்பழக்கம் காரணமாக அவருக்கு கிரிக்கெட் வாரியம் எந்த வித பணியையும் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது கிரிக்கெட் வாரியம் கொடுக்கும் ஓய்வூதியத்தில் வாழ்ந்து வருவதாக வினோத் காம்ப்ளி தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button