மாயமானவர்பெட்ரோல், தீப்பெட்டியுடன்எரிந்தநிலையில் சடலமாக மீட்பு?திருவெறும்பூர் அதிர்ச்சி?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பெட்ரோல், தீப்பெட்டி; மாயமானவர் எரிந்தநிலையில் சடலமாக மீட்பு! – திருவெறும்பூர் அதிர்ச்சி
?♈?திருவெறும்பூர் அருகேயுள்ள சிட்கோ பகுதியில் தீயில் எரிந்த நிலையில் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். உடல் கிடந்த இடத்தில் வாட்டர்கேனில் பெட்ரோல் கொஞ்சம் இருந்துள்ளது. அதன் அருகே கேரி பையில் தீப்பெட்டியும் இருந்துள்ளது. அவரது இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது கொலையா? தற்கொலையா? என நவல்பட்டு போலீஸார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள செல்வபுரத்தைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவர், திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில், நேற்று காலை வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று மதியம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக ரத்தினசாமி மகன் ரவிக்குமார் மற்றும் திருவெறும்பூர் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று பார்வையிட்டபோது திருவெறும்பூர் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போ ரத்தினசாமி உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், அவரது உடல் கிடந்த பகுதியில் வாட்டர் கேனில் பெட்ரோல் இருந்துள்ளது.
மேலும், அந்த கேன் இருந்த பையில், தீப்பெட்டி ஒன்றும் இருந்திருக்கிறது. `தற்கொலை செய்துகொள்பவர்கள் இங்கு வந்து ஏன் தற்கொலை செய்யவேண்டும்? உடலில் தீ வைத்துக்கொண்டால் வேதனையில் அங்கும் இங்கும் ஓடுவார்கள் ஆனால், இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. தந்தை தற்கொலை செய்யும் அளவிற்குக் கோழை அல்ல’’ என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்தநிலையில் திருவெறும்பூர் போலீஸார் ரத்தினசாமி, இறந்து கிடந்த இடத்துக்கு வந்து பார்த்ததோடு, இது திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குள் வராது என்று நவல்பட்டு போலீஸாருக்குத் தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பியுள்ளனர். ஒரு மணிநேரமாக போலீஸாருக்காகக் காத்திருந்தனர்.
அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு போலீஸார், ரத்தினசாமி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்தினசாமி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து கொளுத்திவிட்டு சென்றுவிட்டனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.