உடலை பொன்னிறமாக்கும் ஆமணக்கு எண்ணெய்(விளக்கெண்ணெய் )சரும பாதுகாப்பு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
சருமத்தை பாதுகாக்கும் விளக்கெண்ணெய்
???
உடலைப் பொன்னிறமாக்கும் ஆமணக்கு எண்ணெய் :
தினமும் இரவு படுகைக்குச் செல்லும்முன் இள வெந்நீரில் ஐந்து சொட்டு விளக்கெண்ணெய் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர, வலிப்பு நோய், குன்மம்,குடலேற்றம்,கண்,காது,மூக்கு, வாய் பற்றிய நோய்கள் மாயமாய் விலகும். உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூடு, பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல் போன்றவை குணமாகும். ஆமணக்கு எண்ணெய்யை தொடர்ந்து சாப்பிட்டு வர, தேக நிறம் பொன்போல் ஜொலிக்கும்.
ஆமணக்கு எண்ணெய்யை அளவறிந்து கொடுக்க வேண்டும். சித்தர்கள் நமக்கு அருளிய பேரமுதம் ஆமணக்கு எண்ணெயாகும். குழந்தைகளைத் தாய்போல் வளர்க்கும் தன்மை கொண்டது.பிள்ளை பெற்ற பெண்களின் கருப்பை அழுக்கு வெளியேற ஆமணக்கு எண்ணெய்யை பேதி மருந்தாய்க் கொடுக்கலாம். வயிற்று வலி உள்ளவர்,பிள்ளை பெற்றவர்,கரு உண்டான பெண்கள் அனைவரும் சாப்பிட ஏற்றது.
????• உதடு கருமையை போக்க விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து உள்ளங்கையில் தேய்த்தால் வெண்மையாக க்ரீம் போன்று வரும். அதனை உதட்டில் தினமும் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.
• சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் தூசு, இறந்த செல்களை வெளியேற்றும். விளக்கெண்ணெயை சிறிது பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வர சருமத்தில் உள்ள அழுக்கு வெளியேறும்.
• தினமும் இரவில் ஐ ப்ரோ பென்சிலால் விளக்கெண்ணெயை தொட்டு புருவம் வரைந்து வந்தால், அதே போல் புருவம் அடர்த்தியாக வளரும்
• தினமும் சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால் இளமையான சருமம் கிடைக்கும்.
• ஒரு உருளை கிழங்கை வட்ட வடிவில் துண்டாக்கி அதில் விளக்கெண்ணெய் தடவி கண்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களில் உள்ள கருவளையம் மறையும்.
• விளக்கெண்ணெயுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3 நாட்கள் செய்து வர முகத்தில் கரும்புள்ளிகள் மறைந்து பொலிவுடன் காணப்படும்.