தூத்துக்குடி கொடுமை? குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்தும் என் மகனை கைது செய்யுங்கள், பெற்றதாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறல்? முழுவிவரம்-விண்மீன் நியூஸ்
குடிபோதைக்கு அடிமையாகி, தினமும் கொடுமைப்படுத்தும் என் மகனை கைது செய்யுங்கள்- பெற்ற தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறல்
✍தூத்துக்குடி அத்திமரப்பட்டி, பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி மனைவி தாழபுஸ்பம் (வயது 65) இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தார்.
அம்மனுவில் ,
✍நான் அத்திமரப்பட்டி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருகிறேன். என் கணவர் இறந்து பல வருடங்கள் ஆன நிலையில் தனிமையில் வாழ்கிறேன். எனக்கு சின்னத்துரை (வயது35) என்ற மகன் உண்டு, இவர் மதுவுக்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு என்னை அடித்து கொடுமைப் படுத்துகிறான். சில நாட்களாக மதுக்கடைகள் மூடி இருந்த போது, கொரொனா பற்றிக்கூட கவலைப்படாமல் நிம்மதியாக இருந்தோம். ஆனால் டாஸ்மாக் திறந்த பிறகு மீண்டும் நிம்மதி இழந்து நிற்கிறேன். எனது மகன் அட்டூழியம் தாங்க முடியாமல் மருமகள் எங்கேயோ சென்றுவிட்டாள். எனவே துன்புறுத்தி வரும் எனது மகனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லையென்றால் நான் தற்கொலை முடிவுக்கு செல்ல வேண்டியிருக்கும், என அம்மனுவில் கூறியுள்ளார்.