காவல்துறை பொது மக்களின் நண்பன் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி.ஜெயக்குமார் அறிவுரை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
காவல்துறை பொது மக்களின் நண்பன் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி.ஜெயக்குமார் அறிவுரை
✍தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அனைத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரை கூட்டம் (14.07.2020) இன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
✍கூட்டத்தில் பொதுமக்களிடம் காவல்துறை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல் நிலையப்பணிகளை சட்டப்படி மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும், என்றும் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் பொதுமக்களிடம் கனிவாகவும், சட்டப்படியாகவும் நடந்து கொள்கின்றனரா என்று கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவுரைகளை எடுத்துரைத்தார்.
✍பின்னர், காவல் ஆய்வாளர்களின் நிறை, குறைகளையும் கேட்டறிந்தனர். காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மேலும் பொதுமக்களிடம் சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 42 காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
செெ