தற்சார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்மலா சீத்தாராமன் அறிக்கை?முழு விவரம் – விண்மீன்நியூஸ்
தற்சார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி: நிர்மலா
புதுடில்லி: போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தன்னிறைவு இந்தியா திட்டத்தில் 4வது கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பிரதமர் உரையாற்றிய பின்னர் நான்காவது கட்ட அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
சுயசார்பு என்பது இந்தியாவை தனிமைபடுத்தி கொள்வதற்கான கொள்கை அல்ல. இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்மானமாக கொண்டது.
போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.சர்வதேச சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவே பிரதமர் வகுத்திருக்கும்திட்டத்தின் அடிப்படை . இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தம் அவசியம்.
பிற நாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தங்கள் தேவை.
நிறைய துறைகளில் விதிமுறைகளில் பங்களிப்புகள் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
ஜிஎஸ்டி போன்ற முக்கியமான சீர்திருத்தங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.
வளர்ந்து வரும் புதிய துறைகளை ஊக்கப்படுத்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.முதலீடுகளை ஈர்க்கும்திறனை கொண்டு மாநிலங்கள் தர வரிசைபடுத்தப்படும்.
தொழில் பூங்கா உருவாக்க 5 லட்சம் ஹெக்டேர் காலியிடம் கையிருப்பில் உள்ளது. நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளை கட்டமைப்பை வலுப்படுத்த திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
⚜பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து இன்றைய அறிவிப்புகள் வரப்போகின்றன – நிதியமைச்சர்
⚜கனிமங்கள், விமானம், விண்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தி, அணுசக்தி உள்ளிட்ட 8 துறைகளுக்கு இன்று அறிவிப்புகள் வெளியாகிறது – நிர்மலா சீதாராமன்
⚜நாட்டின் பல்வேறு துறைகளில் கொள்கை ரீதியாக மாற்றங்கள் தேவைப்படுகிறது
⚜முதலீடுகளுக்கு விரைவாக அனுமதி அளிக்க துறைச் செயலாளர்கள் தலைமையில் குழு
⚜முதலீடுகளை ஈர்ப்பதன் அடிப்படையில் இனி மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்படும்
⚜மற்ற நாடுகளுடன் போட்டியிட இந்தியா தயாராக இருக்க வேண்டும்
⚜நாடு முழுவதும் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க 5 லட்சம் ஹெக்டேர் இடம் தேர்வு
⚜- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
⚜வளர்ந்துவரும் புதிய துறைகளை ஊக்குவிக்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் – நிர்மலா சீதாராமன்
⚜இந்தியர்கள் மனங்களில் மாற்றம் கொண்டு வர 3 ஆண்டுகளுக்கு முன்பே மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது
⚜மேக் இன் இந்தியா திட்டத்திற்காக தனியான ஊக்கத் தொகைகளும் வழங்கப்படுகிறது – நிதியமைச்சர்
⚜8 முக்கியத் துறைகளில் தொழில்துறை கொள்கை ரீதியிலான சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்
⚜- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
⚜நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தனியாருக்கு வாய்ப்பு வழங்கப்படும்
⚜- நிதியமைச்சர் அறிவிப்பு
⚜நிலக்கரி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கத் திட்டம்
⚜நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தன்னிறைவு பெற நடவடிக்கை
⚜நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
⚜- நிர்மலா சீதாராமன்
⚜இந்தியர்கள் மனங்களில் மாற்றம் கொண்டு வர 3 ஆண்டுகளுக்கு முன்பே மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது
⚜மேக் இன் இந்தியா திட்டத்திற்காக தனியான ஊக்கத் தொகைகளும் வழங்கப்படுகிறது – நிதியமைச்சர்
⚜8 முக்கியத் துறைகளில் தொழில்துறை கொள்கை ரீதியிலான சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்
⚜- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
⚜நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தனியாருக்கு வாய்ப்பு வழங்கப்படும்
⚜- நிதியமைச்சர் அறிவிப்பு
⚜நிலக்கரி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கத் திட்டம்
⚜நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தன்னிறைவு பெற நடவடிக்கை
⚜நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
⚜- நிர்மலா சீதாராமன்