மதுபானம் திருட கூரை ஏறிய திருடன்?கோவை கும்மாளம்? முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவையில் மதுக்கடையின் கூரையை உடைத்து மதுபானம் திருட முயன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை அடுத்த மேட்டுப்பாளையம் பூக்கடை சந்தை பஸ் ஸ்டாப் பகுதியில் அமைந்துள்ளது டாஸ்மாக் கடை எண்:7785. இதன் மேற்கூரையை உடைத்து மதுபானங்களை திருட திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மகேந்திரன் முயன்று உள்ளார்.
இதனை கண்ட அப்பகுதி வழியாக சென்ற வெள்ளிங்கிரி என்பவர் போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளார். இதனை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் மகேந்திரனை கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் கோவை செட்டி வீதி பகுதியில் மதுபான கடையின் கூரையை உடைத்து மதுபானங்களை திருட முயன்றவர் தப்பியோடினார். இதனை தொடர்ந்து கடைகளுக்கு வெல்டிங் வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.