சாராயம் கடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கோவிந்தராஜ், கந்தசாமி கைது? தர்மபுரி, திருவண்ணாமலையில் அதிர்ச்சி? முழு விவரம்-விண்மீன் நியூஸ்
சாராயம் கடத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் கைது!
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளி சோதனைச்சாவடியில், கோட்டப்பட்டி போலீசார், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி பகுதியில் இருந்து, ‘ஹோண்டா ஆக்டிவா’ ஸ்கூட்டரில் வந்த இருவரை நிறுத்தி, சோதனை செய்தனர்.
இருவரும் போதையில் இருந்ததுடன், 2 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் கள்ளச்சாராயம் கடத்தி வந்ததும் தெரிந்தது.
விசாரணையில், அரூர் திரு.வி.க.நகரைச் சேர்ந்த கோவிந்தராஜன், 38, ஆத்தனுார் கந்தசாமி, 44, என தெரிந்தது.
கோவிந்தராஜன், கோட்டப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும்; கந்தசாமி, வேப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது.
கள்ளச்சாராயம் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்த போலீசார், சொந்த ஜாமினில் விடுவித்தனர்.