இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி அருகே இரண்டு லாரிகள் மோதல்?ஒருவர் பலி, ஒருவர் காயம்?முழுவிரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி அருகே லாரிகள் மோதல் – ஒருவர் பலி- ஒருவர் காயம்

advertisement by google

ஈரோட்டில் இருந்து நெல்லை சங்கர் நகரில் உள்ள தனியார் சிமெண்ட ஆலைக்கு தேவையான மணல் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. லாரியை டிரைவர் சத்தியராஜ் ஓட்டிவந்துள்ளார். அதே போன்று சென்னையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு மெழுகு ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரியை டிரைவர் செந்தில் ஓட்டிவந்துள்ளார். லாரிகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலாட்டின்புதூர் மேம்பாலம் அருகே வந்து கொண்டு இருந்த போது முன்னால் சென்ற மெழுகு லாரி மீது பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் மணல் ஏற்றி வந்த லாரியின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்து. இதனை ஓட்டிவந்த டிரைவர் சத்தியராஜ் கால் நசுக்கி லாரியில் சிக்கி கொண்டார். மற்றொரு லாரிடிரைவர் செந்திலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தும் நாலாட்டின்புதூர் காவல்நிலைய ஆய்வாளர் சுகாதேவி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, லாரியில் சிக்கி இருந்த டிரைவர் சத்தியராஜை மீட்க முயற்சி மேற்கொண்டனர். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து லாரி டிரைவர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் லாரிடிரைவர் சத்தியராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துமவனையில் அனுமதித்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் சத்தியராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு டிரைவர் செந்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button