ட்ரம்ப்பால் ராக்கெட்மேன் என அழைக்கப்பட்ட வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன் நிலை என்ன ?உயிரோடு இருக்கிறாரா , இல்லையா?முழு விபரம் – விண்மீன் நியூஸ்
பியாங்கியாங்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்திருக்கலாம்,…..
மூளைச் சாவு அடைந்திருக்கலாம்,,,,,,,
இல்லாவிட்டால் அவர் உடல்நிலை முன்னேற்றமடைந்து நன்றாக இருக்கலாம் என வதந்திகள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன.,,,,,,
வடகொரியா பறந்த சீன மருத்துவர்கள்…
கிம் ஜோங் நிலை என்ன?
கிம் ஜாங் உன் தனது தாத்தாவின் 88 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாததாலும், அவருக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாலும் அவரது உடல்நிலை மோசமாக இருக்கலாம் என்ற வதந்திகள் அண்மைகாலமாக கிளம்பியுள்ளன.
அணு ஆயுத சோதனை, ஏவுகணை ஏவுதல்களை கடும் எதிர்ப்புகளை மீறி செய்து வந்தமையால் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பால் ராக்கெட் மேன் என அழைக்கப்பட்டவர் கிம் ஜாங் உன்.
சீரான உடல்நிலைகிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கடந்த சனிக்கிழமை ஹாங்காங் டிவி சேனல்கள் தெரிவித்தன.
கிம் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும் வடகொரியா ஊடகங்களோ அங்கு நிலை சீராக இருப்பதாகவே செயல்படுகின்றன.
நடுக்கம்கிம்மிற்கு கைகள் மோசமாக நடுங்கியதால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது அவர் இறந்துவிட்டதாக பெய்ஜிங்கின் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரங்கள் உறுதியற்ற தகவல்களை தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் கிம்மின் உடல்நிலை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில் கிம்மிற்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது. ஆனால் எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது தெரியவில்லை என்றார்.
சிகிச்சைஇந்த மாத தொடக்கத்தில் அவரது நாட்டு மக்களை சந்திக்க சென்றபோது நெஞ்சை பிடித்து கொண்டு கீழே விழுந்ததாக ஜப்பான் நாட்டு பத்திரிகைக்கு சீன மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிம்முடன் இருந்த மருத்துவர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.
வடகொரிய ஊடகங்கள்ஒருவேளை கிம் இறந்திருந்தால் வடகொரிய ஊடகங்கள் தெரிவித்தால் மட்டுமே அது அதிகாரப்பூர்வமானதாக கருத முடியும். கிம்மின் தந்தை, தாத்தா ஆகியோரின் இறப்புகளை 4 நாட்கள் கழித்தே அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன
கிம்மின் உடல்நிலை குறித்து அந்த நாடு சொல்லும் வரை எதையும் நம்ப முடியாது.
பொய்கிம்மிற்கு உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருபபதால் ஒருவேளை அவர் இறந்துவிட்டால் அதில் கொரோனா வைரஸ் முக்கிய காரணியாக இருக்கலாம்.
வடகொரியாவில் கோவிட் 19 பாதித்தோர் இல்லை என அந்நாடு பொய் கூறலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.