கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் காளியப்பன்சார்பில் ரூ4 லட்சம் மதிப்பில் 910 குடும்பங்களுக்கு அரிசி முட்டைகள் வழங்கல்? முழுவிபரம்
கோவில்பட்டி அருகே 910 குடும்பங்களுக்கு ரூ 4 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகள் வழங்கிய முன்னாள் ராணுவ வீரர்
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி ஊராட்சிக்குட்பட்ட அய்யனேரி, கொம்பன்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள 910 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி மூட்டைகள் வீதம் நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை அக்கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் காளியப்பன் மற்றும் அவரது மகன்கள் கமல், காளிராஜ் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், நகர கூட்டுறவு சங்க துணை தலைவர் சரவணன்,முன்னாள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் வேல்சாமி, முன்னாள் ராணுவ வீரர் பரமகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.