ஹைட்ராக்ஸி களோரோக்யின் முட்டாள்தனமான வாதங்களும் , ட்ரம்ப் பேசியதும், பிரதமர் மோடி நடவடிக்கையின் உண்மை நிலவரம் என்ன?- விண்மீன் நியூஸ் அலசல்
ஹைட்ராக்ஸிக்ளோரோக்யின் – முட்டாள்தனமான வாதங்களும்.
மலேரியாவுக்கு கொடுக்கப்படும் இந்த மாத்திரை கோவிட்-19 தொற்று இருப்பவர்களை குணப்படுத்துகிறது என்று டிரம்ப் அறிவித்தார். மேலும் இதற்கு இன்னும் அப்ரூவல் கிடைக்க வில்லை என்றும் அறிவித்தார்.
இந்தியா இந்த மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்து இருந்தது. ஏனென்றால் , எவ்வளவு ஸ்டாக் இருக்கிறது என்று ஆராய வேண்டும். உள்நாட்டுத் தேவைக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
டிரம்ப் , மோடியை அழைத்து , தடையை விலக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். பரிசீலிக்கிறேன் என்று மோடி சொல்கிறார்.
இது சம்மந்தமாக மோடி , அமைச்சர்கள் , அதிகாரிகள் , மருந்து நிறுவனங்கள் என கலந்து பேச வேண்டும். பேசியும் இருக்கிறார். சில மருந்து நிறுவன உயரதிகாரிகள் , தேவையான அளவு இருக்கிறது. மேலும் உற்பத்தி செய்ய முடியும் என்று சொல்கிறார்கள்.
இப்படி கலந்து பேசி நிலைமையை உறுதி செய்து தடை நீக்குவதற்குள் டிரம்ப் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார். மோடியிடம் தடையை விலக்கச் சொல்லி இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
அமெரிக்க ஊடகத்திடம் பேசும்போது..
”இந்திய பிரதமரிடம் பேசினேன். இந்தியாவிடம் மருந்து கேட்டிருக்கிறோம்” என்று டிரம்ப் கூறுகையில்..அங்குள்ள ஊடகவியலாளர் தான் ..”இந்தியா மருந்து தரவில்லையெனில்…அமெரிக்கா பதிலடி கொடுக்குமா?” என்று கேள்வி கேட்பது போல…தூண்டி விடுகிறார். அரசியல் செய்வதற்கு இது நேரமல்ல என்று புறம் தள்ளாமல்.. வழக்கம் போல…அவருடைய பாணியில் ‘maybe-கொடுக்கப்படலாம் ‘ என்று பதிலளிக்கிறார் டிரம்ப்.
அது உடனே டிரம்ப் இந்தியாவுக்கு மிரட்டல் என்று மீடியாவில் வைரல் ஆகிறது.
இங்குபுரியாத போலி பேச்சாளர்கள் வாதாடி ஆட்கள் ,எவ்விதமான புரிதலும் இல்லாமல் வழக்கமாக அறிவார்ந்த சமுதாயத்தை முட்டாள் ஆக்கும் வேலையை செய்கிறது.
எந்நேரமும் எதிர்மறையாக அசிங்கப்படுத்த திரியும் கூட்டங்கள்???
கிட்டத்தட்ட 30 நாடுகள் இந்த மருந்துக்கு நம்மை எதிர்பார்க்கப்படுகிறது, இந்த புரட்சி புயல்கள் சொல்வது போல கியூபா மற்றும் சீனாவிடம் கேட்கவில்லை.
நாம் நம் நாட்டை நினைத்து பெருமிதம் அடையவில்லை என்றாலும் இந்த நேரத்தில் கேலி செய்ய வேண்டிய அவசியமில்லை.