இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

ஸ்ரீவில்லிபுத்தூர் பிரபல மில்லில் 43 பேருக்கு கொரோனா…. கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மில் மூடப்பட்டது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google


ஸ்ரீவில்லிபுத்தூர் பிரபல மில்லில் 43 பேருக்கு கொரோனா…. கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மில் மூடப்பட்டது.,

advertisement by google

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இயங்கிவந்த பிரபல மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் 43 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நோய் தொற்று அதிகமாக உள்ளது. மேலும் வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் ,உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டதால் மேற்கண்ட அலுவலகங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

advertisement by google

தொடர்ந்து நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

advertisement by google

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அரசியல்வாதிகள் பயன்படுத்தும் வேஷ்டி மற்று வெள்ளை சட்டைக்கான வெள்ளை துணிகளை உற்பத்தி செய்யும் மினிஸ்டர் ஒயிட் மில் இயங்கி வருகிறது.
மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கான பரிசோதனை முகாம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

advertisement by google

இன்று அதற்கான ரிசல்ட் வந்த நிலையில் மில்லில் வேலை பார்க்கும் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் 43 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மில்லில் வேலை பார்க்கும் பிற தொழிலாளர்களை வெளியேற்றிய மருத்துவ குழு மில் முழுவதும் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட்டதை அடுத்து அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மில் மூடப்பட்டது.

advertisement by google

ஒரே மில்லில் வேலை பார்த்த 43 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மில்லின் அருகேயுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button