கோவில்பட்டியில் பெண்கள் மீதான வண்முறை எதிர்ப்புத்தின கருத்தரங்கு?
கோவில்பட்டியில் பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தின கருத்தரங்கு
கோவில்பட்டி மைக்ரோ பாயிண்ட் ஐடிஐ நிறுவனத்தில், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் சார்பில் நடந்த பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தின கருத்தரங்கிற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட அமைப்பாளர் மேரி ஷீலா, இலக்கிய உலா ரவீந்தர், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக நகர செயலாளர் ஆம்ஸ்ட்ராங்க் அனைவரையும் வரவேற்று பேசினார். பெண்கள் மீதான வன்முறை குறித்து வக்கீல் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநில செயலாளர் தமிழரசன், திருவள்ளுவர் மன்ற துணை தலைவர் திருமலைமுத்துசாமி ஆகியோர் பேசினர். கருத்தரங்கில் பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினத்தை ஒட்டி அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், காங்., வடக்கு மாவட்ட பொருளாளர் கேசவன், அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் கருப்பசாமி, ஐஎன்டியூசி மாவட்ட பொது செயலாளர் ராஜசேகரன், அனைத்து ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.