இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திமருத்துவம்வரலாறுவிவசாயம்விளையாட்டு

முக்கிய விரிவான செய்திகள்?நாள்: 29.10.2019

advertisement by google

விண்மீன்நியூஸ்?════ WINMEENNEWS.COM ════?

advertisement by google

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

advertisement by google

?════ live news 24/7 ════?
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

advertisement by google

?4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி, சுஜித், உன் உடலை எடுத்து விட்டோம், இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம், எங்களை யார் எடுப்பது? – நடிகர் விவேக்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ??ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பின்னபற்ற உத்தரவிடக்கோரி வழக்கு

advertisement by google

??ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: Breaking

advertisement by google

??குழந்தை சுஜித் மரணத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

advertisement by google

??மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் சடலமாக மீட்கப்பட்டது, மனவேதனை தருகிறது- முதலமைச்சர்

advertisement by google

??ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: சுஜித் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்….

திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான். ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி! இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் அறிக்கை:

82 மணி நேர போராட்டத்திற்கு பிறகும் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட 2 வயது சுர்ஜிர்த்தை உயிருடன் மீட்க முடியவில்லை;குழந்தை இறந்து விட்டான் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். சுர்ஜித்தை உயிருடன் மீட்க தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளை குறை கூற முடியாது. ஆனாலும் சிறுவனைக் காப்பாற்ற முடியாதது சோகமே. இனியும் இப்படி ஒரு சோகம் நிகழாத அளவுக்கு இத்தகைய சூழல்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களும்,கருவிகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ?════ WINMEENNEWS.COM════?

மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷியாம் விமர்சனம்

மத்திய அரசு 1961 தேர்தல் விதிகளை திருத்தி உள்ளது
இனி 80 வயதுக்கு மேல் ஆனவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏற்கனவே ஓட்டு பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆகியோர் தபால் ஓட்டு போடலாம்

அஞ்சல் ஓட்டு புரோக்கர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது

நேரடி ஓட்டை விட காஸ்ட்லி

?════ live news 24/7 ════?
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ??ஆழ்துளை கிணறு அமைக்கும் போது விதிகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

??இதில் கவனக்குறைவு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு- முதலமைச்சர்

??ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ??”சுஜித் மீட்கப்படவேண்டும் என்று துடித்த பல்லாயிரக்கணக்கான இதயங்கள் மீளா துயரில் உள்ளது.”

??திமுக எம்.பி கனிமொழி இரங்கல்.

??ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ??ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது பொறுப்பற்ற செயலால் ஏற்படும் “பேரிழப்புகளை” நியாயப்படுத்துகிறோம்,தப்பித்துக்கொள்கிறோம்.

??உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மூட போர்கால அடிப்படையில் அரசும், தனி மனிதர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.

??ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ??சுஜித் என்று கூறி பல்வேறு குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை யாரும் பகிர வேண்டாமே..!

??ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ??சுஜித் இழப்பு வேதனை அளிப்பதாக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டர் பதிவு

??ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ??சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூற இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடுக்காட்டுப்பட்டி செல்கிறார் முதல்வர் பழனிசாமி!

??ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ??எப்படியாவது நலமுடன் வந்துவிடுவான் என்று அனைவரும் எதிர்பார்த்த குழந்தை சுஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது மனதை உலுக்குகிறது.

குழந்தையை இழந்திருக்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற வார்த்தைகளால் முடியாது.

டிடிவி தினகரன்

??ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ?? குழந்தை சுஜித் இறந்ததற்காக வருந்துகிறேன்; துக்கமடைந்துள்ள பெற்றோருக்கு என் ஆறுதல் :ராகுல் காந்தி இரங்கல்

சென்னை : ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். குழந்தை சுஜித் இறந்ததற்காக தாம் வருந்துவதாகவும் துக்கமடைந்துள்ள பெற்றோருக்கு தனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

??ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ??ஆழ்துளை குழிகளில் நிகழும் உயிரிழப்பில் இதுவே கடைசியாக இருக்கட்டும்.

??தன் உயிரைக் கொடுத்து சுஜித் கற்றுத் தந்திருக்கிற பாடத்தை அனைத்துத் தரப்பினரும் இனியாவது கடைபிடிக்க வேண்டும்.

டிடிவி தினகரன்

??ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ⭕⭕மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு சிறக்க, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி உலக சிக்கன நாள் செய்தி

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: Breaking

⭕⭕உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமனம்

⭕⭕குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

⭕⭕அடுத்த மாதம் 18ஆம் தேதி பதவியேற்கிறார், எஸ்.ஏ.பாப்டே

⭕⭕தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் ஓய்வுபெறுவதால், எஸ்.ஏ.பாப்டே நியமனம்

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

?மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத் தீவுப் பகுதிகளில் 30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ⭕⭕சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி

சுஜித்தை இழந்து வாடும் பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி தம்பதிக்கு மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ⭕⭕சுஜித்தை மீட்க தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டது; குழந்தையை மீட்க ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை?

ஆழ்துளை கிணற்றில் 26 அடியில் இருந்தபோதே குழந்தை சுஜித்தை மீட்டிருக்கலாம்!

  • மு.க.ஸ்டாலின்

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ⭕⭕பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்டவில்லையே என்ற ஆதங்கம் உள்ளது

அரசியல் சாயம் பூசப்படும் என்பதால் தான் குழந்தை சுஜித் மீட்பு பணியை நேரில் பார்வையிடவில்லை

  • மு.க.ஸ்டாலின்

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ⭕⭕இந்திய வானிலை துறையின் தென்மன்டல தலைவர் பாலசந்திரன்

நேற்று இலங்கை ஒட்டியுள்ள நேற்று இலங்கை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குமரி கடல் பகுதிக்கு நகர்ந்து அங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ⭕⭕மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் மீனவர்கள் மன்னார் வளைகுடா தென் தமிழகப் பகுதிகள் குமரி கடல் பகுதியில் மாலத்தீவுகளில் லட்சத் தீவு பகுதிகளுக்கு 29, 30, 31 தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ⭕⭕வட தமிழக மாவட்டங்களில் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ,தர்மபுரி, இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை காண வாய்ப்பு உள்ளது.

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ⭕⭕அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் வடதமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் கானமழை பொருத்தவரையில் தென் தமிழக மாவட்டங்கள் குமரி ,நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும்

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ⭕⭕இமாச்சலப் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் லேசான நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு.

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ⭕⭕சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ?♨மராட்டியத்தில் சிவசேனா வழிக்கு வராவிட்டால் அரசு அமைக்க “பிளான் பி”யை செயல்படுத்த பாரதீய ஜனதா திட்டம்

மும்பை

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

ஆளும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றது. இதில் பா.ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் வென்றன. தவிர, 13 சுயேட்சைகள் வெற்றி பெற்று உள்ளனர்.

புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் பா. ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு இருந்தபோதிலும், முதல்-மந்திரி பதவியை யார் வகிப்பது? ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை மந்திரி பதவிகள்? என்று முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

அதிகாரப் பகிர்வு ஐம்பதுக்கு -ஐம்பது என்ற சிவசேனாவின் கோரிக்கையால் அங்கு அரசு அமைப்பது தாமதமாகி உள்ளது.

முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது. ஐம்பதுக்கு -ஐம்பது” அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் மதிக்கப்படும் என்று பாஜகவிடம் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க கோரிக்கை வைத்து உள்ளது சிவசேனா.

மராட்டிய மாநிலத்தில் கூட்டணி கடையான சிவசேனாவுடன் அதிகார மோதலில் பாரதீய ஜனதா சிக்கி உள்ளது. பாரதீய ஜனதா அரசு அமைப்பதற்கான மற்ற வழிகளை யோசித்து வருகிறது. பாரதீய ஜனதாவின் திட்டம் பி என்பது 2014 ஆம் ஆண்டில் இதே சூழ்நிலையை எதிர்கொண்டபோது பயன்படுத்திய ஒரு தந்திரத்தை மீண்டும் பயனபடுத்த உள்ளது.

2014 ஆம் ஆண்டில், இரு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டன, ஆனால் அவற்றில் எதுவுமே 245 என்ற பெரும்பான்மையை எட்ட முடியவில்லை. இருப்பினும், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 122 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஒரே மிகப்பெரிய கட்சியாக இருந்த பாஜக ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது.

அக்டோபர் 31, 2014 அன்று வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஒரு பிரமாண்ட விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் மராட்டிய மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக பதவியேற்று கொண்டார். 41 தொகுதிகளை கைபற்றிய தேசியவாத காங்கிரஸ் பாஜக அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு அளித்தது.. பாஜக தேசியவாத கட்சியின் ஆதரவை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை, ஆனால் ஆட்சி அமைத்தது.

நவம்பர் 12, 2014 அன்று, மராட்டிய சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தேசியவாத காங்கிரஸ் எம் எல் ஏக்கள் சபையை புறக்கணித்ததால் தேவேந்திர பட்னாவிஸ் வெற்றி பெற்றார்.

சிவசேனாவும் காங்கிரசும் தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெற்றதையடுத்து பாஜக சபாநாயகர் பதவியை போட்டியின்றி கைப்பற்றியது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நான்கு வாரங்களுக்குப் பிறகு, சிவசேனா டிசம்பர் 5 ஆம் தேதி பாஜக அரசில் சேர்ந்து கொண்டது.

அக்டோபர் 31 ம் தேதி பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்கக்கூடும் என்றும், மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 15 நாள் அவகாசம் வழங்ககூடும் என்று கூறப்படுகிறது.

சட்டசபையில் வாக்களிப்பை தேசியவாத காங்கிரஸ் புறக்கணித்தால், பாஜகவுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி என்பது எளிதாகிவிடும்.

நம்பிக்கைத் தீர்மானத்தை தேசியவாத காங்கிரஸ் புறக்கணித்தால், சட்டசபையின் வலிமை 235 ஆகக் குறையும். பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க 118 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவைப்படும்.

கீதா ஜெயின், ராஜேந்திர ரவுத் மற்றும் ரவி ராணா ஆகிய மூன்று சுயேட்சைகள் பாஜகவுக்கு ஆதரவை வழங்கி உள்ளனர். அதே நேரத்தில் இரண்டு எம்எல்ஏக்கள் கொண்ட பிரஹர் ஜன்சக்தி சிவசேனாவுக்கு ஆதரவை வழங்கியுள்ளது.

இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் – வினோத் அகர்வால் மற்றும் மகேஷ் பால்டி முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு தேவேந்திர பட்னாவிஸுக்கு தங்கள் ஆதரவை வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் சிவசேன எம்.பி. சஞ்சய் ரவுத் கூறும் போது

தனது கட்சிக்கும் வேறு வழிகள் உள்ளன, ஆனால் எங்களுக்கு அதிகார பசி இல்லை. உத்தவ் தாக்கரே ஜி எங்களுக்கு வேறு வழிகள் உள்ளன என்று கூறியுள்ளார், ஆனால் அந்த பாவத்தை நாங்கள் செய்ய விரும்பவில்லை. சிவசேனா எப்போதும் சத்திய அரசியலைச் செய்கிறது. நாங்கள் அதிகாரத்திற்காக பசியோடு இல்லை.

பாஜக மற்றும் காங்கிரசுக்கு எதிராக ஒரு அரசியல் சூழலை உருவாக்கிய சரத்பவார் பாஜகவுடன் ஒருபோதும் செல்லமாட்டார்” என்று கூறினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 30-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பாரதீய ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா மும்பை வர உள்ளார்.

அப்போது அவர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ?♨200 மீனவர்களும் 13 படகுகளும் இன்னும் கரை திரும்பவில்லை!’ – `கியார்’ புயலால் கலங்கும் கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்பட்டணம், கேரள மாநிலத்தின் கொச்சி, முனம்பம் துறைமுகங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இதற்கிடையில், புயல் எச்சரிக்கை விடப்பட்டதால் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்பினர்.

அவசரத்தில் கரை திரும்பிய மீனவர்கள் கோவா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரள துறைமுகங்களில் கரை சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யும்படி மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும், அரபிக் கடலின் கிழக்குத் திசையில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கியார் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், கடலில் மின்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் அவர்களது உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையைச் சேர்ந்த பிளஸ்ஸிங், லூர்தாசன், வள்ளவிளையைச் சேர்ந்த கார்மல் மாதா, பசலிகா, லார்ட் மாதா, ஜெர்மியா, செயின்ட் மேரி, மேல்மிடாலத்தைச் சேர்ந்த சியோன் மேரி, இரவி புத்தன் துறையைச் சேர்ந்த லூர்து அன்னை, றோசா மைஸ்டிக்ஸ், ரெடிமீர், மோகன், தூத்துரைச் சேர்ந்த ஜேக்கப் ஆகிய 13 படகுகள் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மற்றும் கேரளத்தின் கொச்சி, முனம்பம் ஆகிய மீன்பிடித்துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்தன.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த இந்தப் படகுகள் எங்கிருக்கின்றன என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. அந்தப் படகுகளில் சுமார் 200 மீனவர்கள் இருக்கிறார்கள். அந்த மீனவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார் வேதனையுடன்.0/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: கங்குலி பிசிசிஐ தலைவராவார் என்று எனக்கு முன்பே தெரியும்” – வீரேந்தர் சேவாக்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சவுரவ் கங்குலி வருவார் என்று தான் 2007ம் ஆண்டு கணித்ததாக வீரேந்தர் சேவாக் தெரிவித்தார். முன்னாள் இந்திய தொடக்க வீரர், அவர் ஒரு நாள் மேற்கு வங்க முதல்வராக இருப்பார் என்றும் கணித்துள்ளார். புதிய பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வீரேந்தர் சேவாக் தனது மற்ற கணிப்பு நிறைவேறும் வரை காத்திருப்பதாகக் கூறினார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஒரு கட்டுரையில், வீரேந்தர் சேவாக் “உண்மையில், தாதா தலைவராக வருவதைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டபோது, ​​2007 தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தேன்.” என்று எழுதினார்.

“கேப் டவுனில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியாக நானும் வசீம் ஜாஃபரும் ஆரம்பத்தில் வெளியேறினோம். டெண்டுல்கர் நம்பர் 4 பேட் செய்ய வேண்டியிருந்தது, ஆனால் களத்தை எடுக்க முடியவில்லை. இந்திய அணியில் ஒருவரான, கங்குலியை சென்று பேட் செய்ய சொல்லப்பட்டது. இது கம்பேக் தொடர் மற்றும் அழுத்தம் இருந்தது. ஆனால் அவர் பேட் செய்த விதம், அழுத்தம் மற்றும் பதற்றத்தை அவர் கையாண்ட விதம், அவரால் மட்டுமே செய்ய முடிந்தது.”

“நம்மில் யாராவது பிசிசிஐ தலைவராக முடியும் என்றால், அது தாதா என்று நாங்கள் அனைவரும் டிரஸ்ஸிங் ரூமில் பேசிக்கொண்டோம். அவர் வங்காள முதல்வராக கூட இருக்க முடியும் என்று நான் சொன்னேன். ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறியது, மேலும் ஒன்று மீதமுள்ளது (எனது கணிப்புகளில் ஒன்று உண்மை, காத்திருந்து மற்றொன்றைப் பற்றி பார்ப்போம்),” என்றார்.

அக்டோபர் 23ம் தேதி இந்தியாவின் முன்னாள் கேப்டன் கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார். வாரங்கள் பரப்புரை மற்றும் பரபரப்பான பார்லிகளுக்குப் பிறகு யாரும் போட்டியிட்டதால், பதவிகளை நியமனம் செய்வதற்கான தேர்தல்கள் எதுவும் நடைபெறவில்லை.

தனது புதிய வேலையின் இரண்டாவது நாளில், கங்குலி இந்திய கிரிக்கெட்டுக்கான “சாலை வரைபடம்” பற்றி கேப்டன் விராட் கோலி மற்றும் வரையறுக்கப்பட்ட ஓவர் துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருடன் கலந்துரையாடினார். பங்களாதேஷுக்கு எதிரான அணி தேர்வு செய்யப்பட்டது.


[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ?♨வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி காவல்துறை டிஜிபிக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம்

சென்னை : வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதிக்கு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார். டிஜிபிக்கு பீலா ராஜேஷ் கடிதம் எழுதியதை தொடர்ந்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக டிஜிபி திரிபாதி பதில் கடிதம் அனுப்பினார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

4:47 PM] விண்மீன்நியூஸ்: ⭕⭕டெங்கு காய்ச்சல் – 3 வயது சிறுமி உயிரிழப்பு

⭕⭕வேலூர் திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை அனுஷ்யா உயிரிழப்பு

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: BREAKING

⭕⭕கூடங்குள அணுமின் நிலைய அதிகாரிகள் விளக்கம்.

⭕⭕கூடங்குள அணுமின் நிலைய தகவல்களை ஹேக்கர்கள் திருடி விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளுக்கு மறுப்பு.

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ⭕⭕திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களில் 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன

⭕⭕மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் பற்றி 9444317862 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தரலாம்

ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ⭕⭕மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்ததாக தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கோதையாறு, குற்றியார், மாறமலை, தச்சமலை, முடவன்பொற்றை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில் குற்றியாரில் நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சஜின் சலோ, 20 வயதான சுபாஷ் மற்றும் 25 வயதான மன்மதன் ஆகிய மூவரும் குற்றியார் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கும் ஜீரோபாயிண்ட் பகுதிக்கு சென்று அங்குள்ள மின் மாற்றியில் தங்கள் கிராமத்திற்கு வரும் இணைப்பை சரி செய்ய முயன்றதாகவும், அப்போது மின்சாரம் தாக்கி மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

மூவரும் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அவ்வழியே சென்றோர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த பேச்சிப்பாறை போலீசார் மூவரின் உடல்களையும் உடல் கூறாய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

⭕⭕ஊடகதளம்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில் பயனற்ற கிடந்த ஆழ்துளை கிணறை மூட நடவடிக்கை நம்ம மேட்டுப்பாளையம் குழு உறுப்பினர்கள்.

நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்
[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ??சாதாரண பேருந்துகளை எக்ஸ்பிரஸ் சர்வீஸ் என பேருந்துகளாக மாற்றி கட்டண கொள்ளையில் ஈடுபடும் அரசு போக்குவரத்து கழகம் கோவை கிளை. இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எக்ஸ்பிரஸ் பெர்மிட் இல்லாமல் இயக்கிய 7 பேருந்துகளுக்கு Rs.9000 அபராதம் விதித்தனர்.


[10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: பயன் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும்

குடிநீர் வடிகால் வாரியத்தில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற ஆணை

  • தமிழ்நாடு குடிநீர்வாரியம் உத்தரவு
    [10/29, 4:47 PM] விண்மீன்நியூஸ்: ? பயன்படாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்தில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற தமிழ்நாடு குடிநீர் வாரியம் ஆணை

advertisement by google

Related Articles

Back to top button