முக்கியவிரிவான செய்திகள் (21.10.2019)
கோவை, திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது
இதனால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று கோவையில் மாலையில் இருந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. மாலை 5 மணிக்கு துவங்கி மழை இப்போதும் பெய்து வருகிறது.திருப்பூர், சேலம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது. இன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா? அதே சமயம் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.மேலும் டெல்டா பகுதிகளில் கடந்த 1.30 மணி நேரமாக மழை பெய்து வருகிறது. திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர், வேதாரண்யம், முத்துப்பேட்டை, திருச்சி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரண்டாவது நாளாக தொடர்ந்து மழை பெய்கிறது. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் விரைவாகவே பருவமழை தொடங்கிவிட்டது. இன்னும் இந்த வருடம் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இலங்கை கடலோர பகுதிகளில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இந்த மழை பெய்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை நாளை வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை
போரூர், நுங்கம்பாக்கம், கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை, பம்மல் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕நாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: BREAKING
⭕⭕ஹரியானா, மகாராஷ்டிரா பேரவை மற்றும் இடைத்தேர்தலில் அதிகளவில் வாக்களியுங்கள்
இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்
- பிரதமர் மோடி
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: BREAKING
⭕⭕சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕விக்கிரவாண்டி கல்பட்டு மையத்தில் வாக்கை
பதிவு செய்தார் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன்..
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை
⭕⭕போரூர், நுங்கம்பாக்கம், கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை, பம்மல் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை
⭕⭕சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (21.10.2019) கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
நேரலை செய்திகள்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??
காஷ்மீர் எல்லையில் நடைபெறும் பரபர சண்டை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா பாகிஸ்தான் ராணுவம் இடையே நடந்து வரும் சண்டை குறித்து இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதை ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ முகாம்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 12 மணி நேரமாக இந்த தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிஓகே எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியான டாங்தார் பகுதியில் இந்த சண்டை நடந்து வருகிறது.இதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி? நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி!இயல்புநிலைஇது குறித்து இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனால் யாரோ இந்தியாவிற்கு உள்ளும், வெளியேயும் இருந்து கொண்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் அவர் காஷ்மீரில் அமைதியை குலைக்க முயன்று வருகிறார்கள். இது குறித்து இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனால் யாரோ இந்தியாவிற்கு உள்ளும், வெளியேயும் இருந்து கொண்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் அவர் காஷ்மீரில் அமைதியை குலைக்க முயன்று வருகிறார்கள்.எல்லை எப்படிசட்டப்பிரிவு 370ஐ நீக்கியதில் இருந்தே எல்லை பகுதியில் இது போல தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகிறார்கள். காஷ்மீரில் மக்களின் ஓற்றுமை மற்றும் அமைதியை குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் செயல்பட முயன்று வருகிறார்கள்.என்ன முயற்சிகடந்த ஒரு மாதமாக பிஓகே பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் தங்களது தீவிரவாத முகாமை முன்னோக்கி நகர்த்த முயல்கிறார்கள். நேற்று மாலை டங்தார் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.கடுமையான தாக்குதல்அதே சமயம் பார்த்து எங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால் நாங்கள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அங்கு இருந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குகள் நடத்தினோம். மிகவும் கடுமையான தாக்குதலை நாங்கள் அங்கு செய்தோம்.என்ன பாதிப்புஇதில் தீவிரவாத முகாம்கள் மோசமாக Nபாதிப்படைந்தது. அவர்களின் முகாம்கள் பல மொத்தமாக அழிந்தது. இதில் 6-10 பாகிஸ்தான் வீரர்கள் இறந்திருக்கலாம். 3 முகாம்கள் மொத்தமாக அழிந்துவிட்டது. அதே அளவு தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று பிபின் ராவத் கூறியுள்ளார்.
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: Breaking
⭕⭕தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
⭕⭕நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு
⭕⭕மொத்த கொள்ளளவான 71 அடியில் வைகை அணை 63 அடி நீர் நிரம்பி உள்ளது..
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சாமி சிலைகள் உடைப்பு
நள்ளிரவில் சாமி சிலைகளை மர்மநபர்கள்
உடைத்ததால் பரபரப்பு
தொப்பபாளையம் என்ற இடத்தில் பதற்றம்-
போலீஸ் குவிப்பு..
நேரலை செய்திகள்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: Breaking
⭕⭕ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சாமி சிலைகள் உடைப்பு
⭕⭕நள்ளிரவில் சாமி சிலைகளை மர்மநபர்கள்
உடைத்ததால் பரபரப்பு
⭕⭕தொப்பபாளையம் என்ற இடத்தில் பதற்றம்-
போலீஸ் குவிப்பு..
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: சாரல் மழையில் வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருப்பு.
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE
?மழை பெய்வதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
நேரலை செய்திகள்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: BREAKING
⭕⭕ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள ராய் என்ற பகுதியில் சில வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார்.
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕திருச்செந்தூரில் வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் செல்ல பேட்டரி கார்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் போது வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் செல்வதற்கு மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் நெல்லையப்பர் கோவிலிலிருந்து பேட்டரி கார்கள் கூடுதலாக கொண்டு வரப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கந்த சஷ்டி திருவிழாவின் போது பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தொரவி ஊராட்சி வாக்குச்சாவடி எண்.49ல் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு.
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 12 காட்டு யானைகள் தஞ்சம்
கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 12 காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளது.
ராமாபுரம், ஆளியாளம், பாதகோட்டா, பீர்ஜேப்பள்ளி கிராம மக்கள் சானமாவு ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕நெல்லை: களக்காடு-வடுகட்சிமதில் இந்து ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம்
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕காவலர் வீரவணக்க நாளையொட்டி மெரினாவில் டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் டிஜிபி திரிபாதி, ஆணையர் விஸ்வநாதன் மலர் வளையம் வைத்து மரியாதை
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ?% வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: BREAKING
⭕⭕விக்கிரவாண்டி தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், தனது அலுவலகத்தில் இருந்து கண்காணித்து வருகிறார்.
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ?% ?? ஈரோடு : பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியது
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ கொடைக்கானலில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு
கொடைக்கானல்: தொடர் கனமழையால் கொடைக்கானலில் அடுக்கம் வழியாக செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் கொடைக்கானல்-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ 10 கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஸ்டிரைக்
நெல்லை: மத்திய அரசு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கடல் நீர் மேலாண்மை திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி 10,000 நாட்டு படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ?% வேலூர் : அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: BREAKING
⭕⭕தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது.
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி: கடந்தகால நிலவரம் என்ன?
புதுச்சேரியில் இடைத்தேர்தலை சந்திக்கும் காமராஜ் நகர் தொகுதி குறித்த சில தகவல்களை பார்க்கலாமா?
புதுச்சேரியில் 2011-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. பிருந்தாவனம், வெங்கட்டா நகர், சித்தன்குடி, காமராஜ் நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளை காமராஜ் நகர் தொகுதி உள்ளடக்கி உள்ளது.
இதுவரை 2 தேர்தல்களை சந்தித்துள்ள காமராஜ் நகரில் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வைத்திலிங்கம் தேர்வாகி உள்ளார். 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற 2 தேர்தல்களிலும் அவரே வெற்றி பெற்றார். கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக காமராஜ் நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
காமராஜ் நகர் தொகுதியில் தொடர்ந்து இரு முறையும் காங்கிரசே வெற்றி பெற்றுள்ளதால், இடைத்தேர்தலிலும் வெற்றியை தக்கவைக்கும் வகையில் அந்தக் கட்சி பரப்புரை மேற்கொண்டது. அதேவேளையில் காங்கிரஸ் வசம் இருந்த அத்தொகுதியை கைப்பற்றும் விதமாக பிற கட்சிகளும் முனைப்புடன் களம் கண்டன.
2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, புதுச்சேரி சந்திக்கும் மூன்றாவது இடைத்தேர்தல் இது. 2016 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து நாராயணசாமி முதலமைச்சர் ஆனார். ஆனால், தேர்தலில் நிற்காததால், அவர் போட்டியிட வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ ஜான் குமார் பதவி விலகினார். இதனால் நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த அசோக் ஆனந்த் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன், தட்டாஞ்சாவடியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றார்.
இவற்றைத் தொடர்ந்து, புதுச்சேரியில் 3வது இடைத்தேர்தல் காமராஜ் நகர் தொகுதியில் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாரும், அதிமுக கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனும் களத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரவீணா மதியழகன் போட்டியிடுகிறார்.
⭕⭕ஊடகதளம்
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ?% கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஆஞ்சநேயர் கற்சிலை திருட்டு – போலீசார் விசாரணை
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: ?% நாங்குநேரியில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது
?% தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது
வேட்பாளர் ரூபி மனோகரன்
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/21, 5:43 PM] விண்மீண்நியூஸ்2: தமிழ் நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக மருதமலை கோயில் வளாகத்தில் .. புராதான சிற்பங்களை பாதுகாப்பது.. சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது..