தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருதுநகரில் 20டன் பிளாஸ்டிக் தீயில் சாம்பல்

advertisement by google

♦விருதுநகரில் 20 டன் பிளாஸ்டிக் தீயில் சாம்பல்!

advertisement by google

?விருதுநகர் மாவட்டம், கூரைக்கூண்டு ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில், மகளிர் சுய உதவிக்குழு சேமிப்பு குடோனாகப் பயன்படுத்தி வந்துள்ளன.

advertisement by google

?இந்த மகளிர் சுய உதவிக்குழு தலைமை பொறுப்பில் இருப்பவர் காமாட்சி. இந்த குடோனில் தொடர்ந்து, இந்த குழுவைச் சேர்ந்தவர்கள், பிளாஸ்டிக் கழிவுகளை அடைத்து வந்துள்ளனர்.

advertisement by google

?இந்நிலையில், நேற்று இந்த குடோனுக்கு அருகே உள்ள சலோன் கடையிலிருந்து கரும் புகை வந்துள்ளது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

advertisement by google

?தீ முன்னதாக பிளாஸ்டிக் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடோனிலிருந்து பரவியுள்ளது. இந்த தீ, சலூன் கடையைத் தொடர்ந்து அருகே இருந்த ஒரு உணவகம் வரை பரவியுள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்துள்ளது.

advertisement by google

?தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர்.

advertisement by google

?தீவிபத்தால், 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்த தீவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டவுன் பஜார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button