இந்தியாவில் வாழவேண்டும் என்றால் பாரத்மாதா கீ ஜே எனச்சொல்ல வேண்டும்? மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான்?
இந்தியாவில் வாழ வேண்டும் என்றால், “பாரத் மாதா கீ ஜே” எனச் சொல்ல வேண்டும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
இந்தியாவில் வாழ வேண்டும் என்றால், பாரத் மாதா கீ ஜே என, பொதுமக்கள் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும் என, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்(Dharmendra Pradhan) கூறியிருக்கிறார்.
புனேவில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி.யின்(ABVP) 54ஆவது வருடாந்திர மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து நுழைந்து வாழ்வதற்கு, இந்தியா என்ன தர்ம சத்திரமா?, அல்லது அப்படியொரு நிலைக்கு இந்தியாவை மாற்ற விட முடியுமா? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் குடிமக்கள் குறித்த சரியான கணக்கெடுப்பு உள்ளபோது, இந்தியா விடுதலை அடைந்து, 70 ஆண்டுகளாகியும், சரியான குடிமக்கள் கணக்கீடு ஏன் இல்லை? என்பதை போராட்டத்தில் ஈடுபடுவோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் தர்மேந்திர பிரதான் சுட்டிக்காட்டினார்.