கிரைம்

கோவில்பட்டி சீனிவாசநகரில் பெண் தொழிலாளி வீட்டில் இருந்த 8 தோட்டாக்கள் பறிமுதல் ✍️முழு விவரம்✍️ விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில் பெண் தொழிலாளி வீட்டில் இருந்த 8 தோட்டாக்கள் பறிமுதல்*

advertisement by google

கோவில்பட்டி:

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ஆனந்தவள்ளி.

advertisement by google

இவரது கணவர் இறந்து விட்டார். நூற்பாலையில் வேலைபார்த்து வரும ஆனந்தவள்ளி அதே பகுதியை சேர்ந்த குட்டி என்ற பெண்ணிடம் கடன் வாங்கியதாகவும், அதனை அவர் திருப்பி கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

advertisement by google

இதைத்தொடர்ந்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த வள்ளியிடம், குட்டி பணத்தை கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

advertisement by google

மேலும் ஆனந்தவள்ளி வீட்டு சாவியை குட்டி பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆனந்தவள்ளி ராஜபாளையத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டார்.

advertisement by google

இந்நிலையில் நேற்று குட்டி, ஆனந்தவள்ளி வீட்டிற்கு சென்று அங்கு இருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். அதில் 8 துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

advertisement by google

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று 8 தோட்டக்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குட்டி, ஆனந்தவள்ளி ஆகிய 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துப்பாக்கி தோட்டாக்கள் யாருக்கு சொந்தமானது? இவை உரிமம் பெற்ற தோட்டாக்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button