கிரைம்தமிழகம்

கடன் கேட்டு கொடுக்காததால் வாலிபர் செய்த கொடூர சம்பவம்.. போலீசார் விசாரணை.!

advertisement by google

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறக்குன்று ஆர்சி தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதில் ஜேம்ஸ் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஜேம்ஸ் சுத்தியலால் தாக்கி, அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார்.

advertisement by google
Kanniyakumari

இதனையடுத்து தேவாலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த மனைவி ஜெயராணி தனது கணவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

advertisement by google

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஜேம்ஸ் அணிந்திருந்த தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சிசிடிவி வீடியோ காட்சிகளை அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

advertisement by google
Kanniyakumari

அந்த விசாரணையில் மருதன்கோடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடன் கேட்டு கொடுக்காததால், ஜேம்சை கொலை செய்து பணம் மற்றும் நகையை தேடியது தெரிய வந்தது. இதனையடுத்து சுரேஷி கைது செய்து அவரிடமிருந்து தங்க நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button