இந்திய நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றம் நாளை திறப்பு✍️ஜார்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள, நாட்டிலேயே மிகப்பெரிய உயர்நீதிமன்றத்தை, ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நாளை (மே.,24)ம் தேதி நாளை திறப்பு ✍️முழுவிவரம் ✍️விண்மீன்நியூஸ்
ஜார்கண்ட் : ஜார்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள, நாட்டிலேயே மிகப்பெரிய உயர்நீதிமன்றத்தை, ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை (மே.,24)ம் தேதி திறந்து வைக்கிறார்.
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சி அடுத்த துர்வாவில், 165 ஏக்கர் பரப்பளவில் உள்ள, அம்மாநில உயர்நீதிமன்றத்தை புதுப்பிக்கும் பணி, 2015 பிப்., மாதம் தொடங்கியது.
பணிக்கான காலக்கெடு, 30 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நீண்ட காலதாமதத்திற்கு பின், கட்டுமான பணிகள் முடிந்துள்ளன.
22 ஏக்கர் பரப்பளவில் உள்ள, உச்ச நீதிமன்றத்தை விட, பரப்பளவு அடிப்படையில், இந்நீதிமன்றம் பெரியதாக கட்டப்பட்டுள்ளது. ரூ. 550 கோடி கட்டப்பட்டுள்ள, இக்கட்டடத்தில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 1,200 வழக்கறிஞர்கள் அமரும் வகையில், இரு அரங்குகள், 540 அறைகள் கொண்ட சேம்பர், 3,000 ச.அடியில் கட்டப்பட்ட நுாலகம் ஆகியவை உள்ளன.
2,000 வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங், வழக்குகளை விசாரிக்க, 25 பிரமாண்ட குளிரூட்டப்பட்ட நீதிமன்ற அறைகள், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சட்ட புத்தகங்கள், 70 போலீசார் தங்கும் அறைகள், அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்களுக்கான அறைகள், 95 அரசு வழக்கறிஞர்களுக்கான அறைகள் ஆகியவை உள்ளன.