நாம் தமிழர்கட்சி காளியம்மாள் நடிகை விஜயலட்சுமிக்கு எச்சரிக்கை? என்னா பேச்சு இது?
நீயெல்லாம் ஒரு பெண்ணுன்னு சொல்லிட்டு திரியாதே…….
யாராவது காசு கொடுத்தா, வீட்டு கஷ்டத்துக்காக விலைமாதுவாக போகக்கூடிய பெண்களை கூட நான் பார்த்தி ருக்கிறேன்…….
ஆனால் கருத்தியலை களவாடி காசுக்கு வாங்கிட்டு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்கதான் பார்க்கிறேன்.
இனி எந்த உறவையாவது சொல்லி பேசுனே.. நடக்கிறது வேற……..
எல்லா பெண்களும் கொந்தளிச்சுடுவோம்..
என்னா பேச்சு இது?
என்று நாம் தமிழர் கட்சி காளியம்மாள் நடிகை விஜயலட்சுமியை எச்சரித்துள்ளார்.
கடந்த சில தினங்களாகவே நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்..
இது தமிழக அரசியலில் பரபரப்பை தந்து வருகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சிறந்த பேச்சாளரான காளியம்மாள், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது
விஜயலட்சுமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த கூட்டத்தில் காளியம்மாள் பேசியதாவது:
முந்தானை முடிச்சு”நான் ஒரு மீம் பார்த்தேன்… “முந்தானை முடிச்சு”-ன்னு ஒரு படம்.. அந்த படத்துல ஒரு பையனுக்கு டிரவுசர் கழண்டுடும்.. குத்திவிட பின் இருக்காது.. அவரே வந்து போட்டுவிடுவாரு.. உடனே அந்த பையன் சார் சார்.. நானே போட்டுக்கறேன் சார்அப்படீன்னு.. அந்த பையனுக்கு
பாக்கியராஜ் படத்துக்கு நேரே பிரசாந்த் கிஷோர்னு போட்டு வெச்சிருக்காங்க.. ரொம்ப நேரமா விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருந்தேன்.. ஏன்டா டிரவுசர்கூட போட தெரியாதவனுங்களாடா நீங்க..இட ஒதுக்கீடுதங்கள் வீடுகளை அவ்வளவு திறம்பட, சிறப்பாக, நிர்வகிப்பவர்கள் பெண்கள்.. வீட்டை முன்னெடுத்து செல்லும் வீரமிக்க ஒரு பெண்ணால் அரசியல் நிர்வாகத்தை சரியாக செய்யும் என்ற நம்பிக்கையில், 50 சதவீத இட ஒதுக்கீட்டை தந்து, பெண்களை களத்தில் நிற்க வைத்து வருகின்ற 2021 தேர்தலில், 117 இடங்கள் ஆண்கள், 117 இடங்களை பெண்களுக்கு தந்து நிற்க வைக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி .உணர்வுஆனால், எந்த மனிதரை பெண்களை வன்மைப்படுத்துவதாக ஒப்பிடுவது? அந்தம்மா சொல்லிட்டு கிடக்கு.. இருக்கு.. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையின் அருமை தெரியுமா? அன்பு தெரியுமா? உணர்வு தெரியுமா? அந்த இணக்கம்தான் எங்கள் அண்ணனுக்கும் எங்களுக்கும் இருக்கக்கூடிய உணர்வு.. இனி ஒரு நாக்கு, எங்க அண்ணனையும், மத்த பெண்களையும் ஒன்றுபடுத்தி பேசினே?பச்சை துரோகிஅண்ணன்-தங்கையா பேசு, தகப்பன்-மகளா பேசு, வேற எந்த உறவையாவது சொல்லி பேசுனே.. நடக்கிறது வேற.. எல்லா பெண்களம் கொந்தளிச்சுடுவோம்.. என்னா பேச்சு இது? நீயெல்லாம் ஒரு பெண்ணுன்னு சொல்லிட்டு திரியாதே.. யாராவது காசு கொடுத்தா, வீட்டு கஷ்டத்துக்காக விலைமாதுவாக போகக்கூடிய பெண்களை கூட நான் பார்த்திருக்கிறேன்… ஆனால் கருத்தியலை களவாடி காசுக்கு வாங்கிட்டு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்கதான் பார்க்கிறேன்.அரசியல்ஒரு மனிதன் இந்த மண்ணையும் மக்களையும் நேசித்து, இயற்கை வளங்களை நேசித்து.. எல்லா வகை அரசியலையும் பேசுகிறார்.. ஆனால் எந்த அரசியல் கட்சியாவது எங்காவது ஒரு குளத்தை தூர்வாருதா? ஆனால் சாக்கடை அள்ளுகிறார்கள் எங்க பிள்ளைங்க.. இதெல்லாம் அரசியலுக்காக? இல்லை,.. உங்கள் வருங்கால தலைமுறைக்காக.. எங்களுக்கு ஒரு பேர் வெச்சிருக்காங்க, சீமான் தம்பி தங்கைகள் கத்தி கத்தி பேசுறாங்கன்னு.. யாருக்காக கத்துறோம்.. புரிந்துகொள்ளுங்கள், நம் அடுத்த தலைமுறை எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்றார்.