t

என் அப்பாவுக்கு நன்றாக தமிழ் படிக்க தெரியும், ஆனால் தமிழ் எழுதத் தெரியாது’ என்று நடிகர் ரஜினியின் மகள் மற்றும் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘Hoote’ செயலி அறிமுக நிகழ்வில் கிண்டல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

‘அப்பாவுக்கு தமிழ் எழுதத் தெரியாது’: சௌந்தர்யா ரஜினிகாந்த்

advertisement by google

‘என் அப்பாவுக்கு நன்றாக தமிழ் படிக்க தெரியும், ஆனால் தமிழ் எழுதத் தெரியாது’ என்று நடிகர் ரஜினியின் மகள் மற்றும் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘Hoote’ செயலி அறிமுக நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

advertisement by google

67-வது தேசிய திரைப்பட விருதுகள், 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு இன்று வழங்கப்பட்டது. இந்த விழாவில் 45 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனைக்காக ‘தாதா சாஹேப் பால்கே’ விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘தாதா சாகேப் விருது பெருவதில் மகிழ்ச்சி. நாளை எனக்கு இரண்டு முக்கியான நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. ஒன்று விருது வாங்குவது இனியொன்று Hoote செயலியை என் மகள் தொடங்கி வைப்பது’ என்று அறிக்கை வெளியிட்டார்.

advertisement by google

இந்நிலையில் இன்று Hoote என்ற செயலியை சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். வணிக தலைவரான சன்னி போகாலாவுடன் இணைந்து இந்த செயலியை அவர் வெளியிட்டார். அப்போது பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘அப்பா முன்பு கட்சி தொடங்குவது தொடர்பாக ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்பினார். அப்பொழுது பிறந்த யோசனை தான் hoote செயலி. அப்பாவுக்கு நன்றாக தமிழ் படிக்க தெரியும். ஆனால் எழுதத் தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை கூறியுள்ளேன்.

advertisement by google

அவருக்கு தமிழ் எழுதத் தெரியாது என்று கூறியதால் தமிழ்நாடு மக்கள் அவர் மீது வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை’ என்று அவர் கூறினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button