தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவரை கீழே தள்ளியதில் உயிரிழந்ததால் அண்ணன், தம்பி இருவர் கைது✍️ திருநெல்வேலியில் பதட்டம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவரை கீழே தள்ளியதில் உயிரிழந்ததால் அண்ணன், தம்பி இருவர் கைது.
திருநெல்வேலி மாவட்டம் 15.12.2020
மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆயுப்கான் புரம் பகுதியை சேர்ந்த தவிடன்(61) என்பவருக்கும், கீழபிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மகாராஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் மகாராஜா தவிடனை அவதூறாக பேசி அடித்தபோது தவிடனின் உறவினர்கள் சண்டையை விலக்கி விட பின் அவரது அண்ணன் வெங்கடேஷ் என்ற வெங்கடேஷுடன்(21) வந்த தவிடனை அடித்த கீழே தள்ளிவிட்டனர் பின் கீழே விழுந்த தவிடனை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்துவிட்டார். இதுகுறித்து தவிடனின் மனைவி அமுதா அவர்கள் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் மானூர் காவல் ஆய்வாளர் திரு ராமர் அவர்கள் மகாராஜன் மற்றும் வெங்கடேஷ் @ வெங்கடேஷ் பெருமாளை u/s 448,294(b),323,302 IPC பிரிவின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.