காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி ஆ ராசா – அமைச்சர் கடம்பூர் செ ராஜூ பேச்சு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி ஆ ராசா – அமைச்சர் கடம்பூர் செ ராஜூ
கழுகுமலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவிற்கு அருகதை கிடையாது,காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி ஆ ராசா ,2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக ராசாவும் கனிமொழியும் ஜோடியாக திகார் சிறையில் இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை.இருவரும் நாட்டு பிரச்சனைக்கோ. மக்கள் பிரச்சனைக்கோ சிறை செல்லவில்லை என்றும், ஆ ராசா அமைச்சராக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு தான் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இதற்கு தான் திமுக தலைவர் கருணாநிதி கூட கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னார்.ஆ ராசா விற்கு நாவடக்கம் வேண்டும் உலகத் தத்துவங்களை ஆ.ராசா பேசுகிறார். அதைவிட பேச எங்களுக்கும் தெரியும். அதிமுக தொண்டர்கள் வேடிக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி இழிவாகப் பேசினால் நாட்டில் நடமாட முடியாத நிலையை ஆ ராசா விரைவில் சந்திப்பார் என்றார்.