மது போதையில் இளம்பெண் ஆபாசமாக பேசி தகராறு✍️ இளம்பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
மது போதையில் தகராறு இளம்பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு
துரைப்பாக்கம்: திருவான்மியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவான்மியூர் தெற்கு அவென்யூ சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த ஒரு காரை மடக்கி, விசாரித்தனர்.
காரில், ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மது போதையில் இருந்தனர். அவர்களை கீழே இறக்கி, விசாரித்தபோது, அந்த இளம்பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்.
தகவலறிந்து சட்டம் ஒழுங்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அடையாறு இந்திரா நகரை சேர்ந்த ஷேசு பிரசாத் (27), காமினி (28) என தெரியவந்தது. இதனையடுத்து, இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.