பெற்றோர் பணம் தராததால் எலி பேஸ்ட் சாப்பிட்டு மகன் தற்கொலை!✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பெற்றோர் பணம் தராததால் எலி பேஸ்ட் சாப்பிட்டு மகன் தற்கொலை!
ஹைலைட்ஸ்:
மகனுக்கு பணம் தராத பெற்றோர்
விரக்தியில் எலிபேஸ்ட் சாப்பிட்டு மகன் தற்கொலை
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா பேரளம் அருகே உள்ள பூங்காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் முத்தழகன். இவருக்கு வயது 22. இவர் லாரி ஓட்டுநராக தொழில் செய்து வருகிறார்.
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோரிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். அவர்கள் தற்போது பணமில்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த முத்தழகன் எலி பேஸ்ட் மருந்தை சாப்பிட்டுள்ளார். ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்தழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பேரளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.